Followers

Tuesday, February 26, 2013

பரிபூரண வட்டம்



வணக்கம் நண்பர்களே !
                 இரண்டு நாட்கள் உங்களின் ஆத்மாவின் பசிக்கு உணவை நான் தரவில்லை இன்று நல்ல விருந்துடன் கொடுத்துவிடலாம் என்று ஒரு நல்ல கருத்தை தருகிறேன்.

ஒரு மனிதனுக்கு நல்ல வேலை கை நிறைய சம்பளம். இருக்க நல்ல வீடு. அன்பான மனைவி. குழந்தைகள். வெளியில் சென்று வர சொகுசு கார் இப்படி ஏகாப்பட்டதை அமைத்துக்கொடுத்திருக்கிறான் இறைவன். வாழ்க்கையும் அமைதியாக தான் சென்றுக்கொண்டு இருக்கிறது இருந்தும் சம்திங் மிஸ்ஸிங் உடலில் போட்டு வாட்டி எடுக்கிறது. எதையோ ஒன்றை தேடிக்கொண்டுருக்கிறது. எதை தேடுகிறது, என்ன நடக்கிறது.பயமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால்

அது தான் ஆத்மாவின் தேடுதல். நீங்கள் இதுவரை தேடியது அனைத்தும் உங்களின் சதைக்கு தேடிக்கொண்டு இருந்தீர்கள். உங்களின் ஆத்மாவிற்க்கு ஒன்றும் தேடவில்லை. உங்களின் ஆத்மாவிற்க்கும் தேடி உங்களின் சதைக்கும் தேடி இருந்தீர்கள் என்றால் உங்களின் வாழ்க்கை நிம்மதியாக சென்றுக்கொண்டுருக்கும். நாம் சதைக்கு தேடி தேடி அலைந்து ஏதோ அலுத்துபோய் கடைசியில் ஆத்மாவிற்க்கு தேடினால் உங்களால் பரிபூரண வாழ்வை அடையமுடியாது. 

இதனை நீங்கள் உணர்ந்தாலே போதும். நாம் வந்தகாலை விட்டுவிட்டு பந்தகாலை பிடித்துக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியவரும். இந்த எண்ணங்கள் இளம்வயதில் வந்தது என்றால் நல்லது. வயது சென்றவுடன் வந்து என்றால் அந்த வாழ்க்கை வீண் என்று உங்களுக்கு தெரியவரும். இப்படிபட்ட வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்று தெரியவரும்.  

நாடி நரம்புகள் ஓய்ந்து ஒடிந்துவிட்ட பிறகு என்ன செய்யமுடியும் நொந்துக்கொண்டு இருக்கவேண்டியது தான். உங்களின் விதி என்று ஏற்றுக்கொள்ளவேண்டியது. 

இப்படிபட்ட சூழ்நிலையிலும் நீங்கள் எதையாவது செய்யமுடியுமா என்று உங்களின் ஆத்மா என்னிடம் கேட்கிறது. உங்களின் மனம் கேட்டால் கண்டிப்பாக வில்லங்கமாக அது இருக்கும் உங்களின் ஆத்மா கேட்பது நியாயமாக இருக்கிறது அதனால் அப்படி கேட்கிறது. அதற்கு என்னுடைய ஆத்மா எதையாவது உங்களுக்கு செய்யும். 

இந்த தேடுதல் என்பது அனைவருக்கும் வந்துவிடாது. ஒரு சிலருக்கு வரும் ஒரு சிலருக்கு நீங்கள் என்ன செய்தாலும் வராது. உங்களின் தேடுதலுக்காக என் ஆத்மா செய்யும் ஒரு எளிய பரிசோதனை செய்து பாருங்கள்.

நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் செய்யவேண்டியது இது ஒன்று தான். நீங்கள் ஜாதககதம்பத்தை தொடர்ந்து ஒரு வாரம் படியுங்கள். ஒரு நாள் விட்டுவிடுங்கள் அந்த ஒரு நாளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் ஏதும் நடைபெறவில்லை என்றால் மறுநாள் படிக்காதீர்கள் அன்றும் ஒன்று நடக்கவில்லையா என்று பாருங்கள் கண்டிப்பாக நீங்கள் எப்படியாவது படிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்களின் ஆத்மா பரிபூரணமான அந்த இறுதிவட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இறுதிவட்டத்தை நோக்கி செல்லும் ஆத்மாவால் மட்டுமே நான் எழுதுவது ஆத்மாவர்த்தமாக புரியும் நிலை ஏற்படும். இதில் ஒரு சில ஆத்மாக்கள் அந்த இறுதிவட்டத்தை சும்மா பார்த்துவிட்டு அப்படியே திரும்பிவிடும் அந்த வட்டத்தில் இணையாது. 

நீங்கள் ஜாதககதம்பத்தை படிக்கமுடியாமல் இருக்கமுடிகிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் தேடவேண்டியது வேறு இடம். ஜாதககதம்பத்தை படிக்கமுடியாமல் இருக்கமுடியவில்லை என்றால் நீங்கள் வரவேண்டிய இடத்திற்க்கு சரியாக வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். என்னுடைய ஆத்மா பரிபூரணவட்டத்தை நெருங்கிவிட்டது நாம்  வாழ்கின்ற வாழ்க்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

சரியா நண்பர்களே நீங்கள் சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் எந்த இடத்தில் நீங்கள் இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

raji said...

எங்களின் ஆத்மா தேடுதலுக்கு கூடிய விரைவில் அமைதி கொடுங்கள்.நன்றி.

rajeshsubbu said...

//* raji said...
எங்களின் ஆத்மா தேடுதலுக்கு கூடிய விரைவில் அமைதி கொடுங்கள்.நன்றி *//
வாருங்கள் ராஜி கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன். நன்றி