Followers

Tuesday, February 26, 2013

மகரம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     மகர ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

மகர ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கும் குருவுக்கும் ஆகாது. நன்றாக இருந்தாலே பிரச்சினை இதில் இருவருக்கும் சண்டை என்றால் அதிகமாக இருக்கும்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுத்திருக்க வேண்டும்.

அடையாளம்?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சுக்கிரனின் வீடு காமதொல்லை கொடுத்திருக்கலாம்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்
வெள்ளிக்கிழமையில் அம்மனை வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் கோவிலிலேயே அடையாளம் காணலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 






No comments: