Followers

Saturday, February 9, 2013

பூர்வ புண்ணியம் 29



வணக்கம் நண்பர்களே!
                
என்னிடம் பேசிய நண்பர் கார்த்திக் மற்றும் பல நண்பர்கள் இதில் உள்ள கஷ்டத்தை சொன்னார்கள். என்னைப் பொருத்தவரை இந்த தொடர் ஐந்து சதவீதம் மட்டும் தான் நிறைவு பெற்றுருக்கிறது. அனைத்தும் முடியும்போது உங்களுக்கு நன்றாக புரியும். அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதால் தான் உங்களுக்கு நான் பதிவுகளை தருவதில் வேகம் காட்டிக்கொடுத்து கொண்டுருக்கிறேன்.

பூர்வபுண்ணியத்தில் பல நண்பர்கள் கேட்கும் கேள்வி பரிகாரம் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். நீங்கள் பரிகாரம் சொல்லாமல் சென்று விடுவீர்கள் என்று நினைக்கிறேன் என்று கேட்டார்கள்.

பரிகாரம் நான் சொல்லுவது என்றால் ஆயிரம் பரிகாரத்தை பரிந்துரைக்கமுடியும் அப்படி பரிந்துரைக்கும் பரிகாரம் உங்களின் கர்மாவை தீர்க்கும் என்பது சந்தேகமே. நீங்கள் ஆன்மீகபலத்தை வலுப்படுத்துங்கள் அனைத்திற்க்கும் விடையை ஆண்டவன் தருவான். மனிதன் பரிகாரம் செய்து கர்மாவின் வினையை அதிகரித்துக்கொள்கிறானோ தவிர சரியான தீர்வு அவனுக்கு கிடைப்பதில்லை. 

ஜாதககதம்பம் வழியாக மனிதனை கரைசேர்க்க என்ன வழி என்பதை மட்டுமே யோசித்து எழுதிவருகிறேன். நீங்கள் உங்கள் சோதிடரை பார்த்து பூர்வபுண்ணியத்தைப்பற்றி கேட்காதீர்கள். இது புதுமையான தொடர் எனது எண்ணத்தில் இருந்து எழுதிவருகிறேன். இதனைப்பற்றி யாரிடம் கேட்டலாம் இதற்கு விடை கிடைப்பது  சந்தேகமே. நான் அதற்காக பெரிய ஆள் என்று காட்டிக்கொள்வில்லை..

இதனை எப்படி எழுதுகிறேன் என்பது எனக்கும் தெரியாது. இதனை எழுதவேண்டி யாரோ ஒருவன் என்னை இயக்குகிறான். அவன் படி தான் அனைத்தும் வெளிவருகிறது. இதனை நீங்கள் நம்பமாட்டீர்கள் ஆனால் அது தான் உண்மை.

நான் எழுதும் பூர்வபுண்ணியம் கண்டிப்பாக பல பேர்களிடம் சென்றடையும் என்று எனக்கு தெரியும், அதைப்போல் பல பேர்களின் மனதில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது எப்படி என்கிறீர்களா கர்மாவை தீர்க்க எவன் உதவி செய்தாலும் கடவுள் அவன் பக்கம் இருப்பான். நீங்கள் வேண்டுமானால் ஆன்மீகவரலாற்றை எடுத்துப் பார்த்தால் விடை கிடைக்கும். இது தலைகணம் கிடையாது ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தை மாற்றவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: