Followers

Wednesday, February 27, 2013

மீனம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!

                     மீன ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

மீன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

தாயாருக்கு பிரச்சினையை கொடுத்திருப்பார்.

அடையாளம்?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். இவர் மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். இவர் அந்நியமொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு பக்கமாக இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருந்திருப்பார். தாய்மொழியை மீது அதிக ஈடுபாடு இருக்கும். இவரின் வீடு வடக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குரு சந்திரன் வீட்டில் அமர்வதால் நீர் வழியில் பாதிப்பு ஏற்படுத்திருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

நீரில் தள்ளிவிட்டு மூச்சு திணறி செத்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் தொடைகள் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கழுத்தில் அடிப்பட்டு செத்திருப்பார்.


நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

குரு பகவானை வழிபட்டு வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: