Followers

Wednesday, February 13, 2013

பூர்வ புண்ணியம் 32



வணக்கம் நண்பர்களே!
                    பூர்வ புண்ணியத்தொடர் வரும் காலங்களில் பூர்வ புண்ணிய அனுபவ தொடர் என்று மாற்ற வேண்டிய கட்டாயம் வரும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் என்னை சந்திக்கும் நபர்கள் அனைவரும் அவர்களுக்கு முன்ஜென்மத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிந்துக்கொள்கிறார்கள். 

நேற்று இருவர் என்னை சந்தித்து பேசினார்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு குரு கெட்டு இருந்தார். அவர் கெட்டதற்க்கான காரணத்தை முன்ஜென்மத்தை வைத்து சொன்னேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். 

அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு கோவிலில் உள்ள ஒரு நபரை கொன்று இருக்கிறார்கள். அதனால் அந்த பெண்ணின் ஆத்மா இவர்களின் குடும்பத்தினரை பழிவாங்குகிறது. இவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அந்த கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. அந்த கோவிலை எடுத்த நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அந்த கோவிலுக்கு சென்றால் அல்லது அந்த கோவிலை கட்ட வேண்டும் என்று நினைத்தால் கூட அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் இறந்துவிடுகிறார்கள்.

ஒரு நபருக்கு செய்த கொடுமை இவர்களின் வம்சா வழியையே பாதிக்க செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த ஆத்மா அந்தளவுக்கு இவர்களின் குடும்பத்தை தாக்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கர்மாவின் வினையை நீங்களே இந்த சம்பவம் வழியாக தெரிந்துக்கொள்ளவும்.

வாழ்கின்ற நாளில் ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ முயற்சியாவது செய்யுங்கள். பெரும்பாலும் மக்கள் மனது ரீதியாக தான் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். மனது ரீதியாக கொடுத்தாலும் பாவம் பாவம் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

நாம் தவறு செய்கிறோம் அதனால் அதன் வினை நமக்கு தான் வரும். நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வராது என்று நினைத்தால் நீங்கள் தான் முட்டாள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அனைத்தையும் உங்களின் குடும்பம் பெறும் பொழுது உங்களின் பாவத்தையும் உங்களின் குடும்பம் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: