Followers

Tuesday, February 12, 2013

பூர்வ புண்ணியம் 31



வணக்கம் நண்பர்களே !
                    பூர்வ புண்ணியத்தொடர் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திறது என்பதை எனக்கு வரும் மெயிலும் போனும் காட்டுக்கிறது. இந்த தொடர் வெற்றிக்கு இது ஒன்றே போதும்.

ஒரு சில நண்பர்கள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை கண்டறிந்துள்ளார்கள். நான் கொடுக்கும் தாக்கப்பட்ட இடத்தில் சரியாக இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படும். இதனை வைத்தே நான் சொல்லுவது எந்த அளவுக்கு உண்மை என்பதை நீங்களே அறியலாம். மிகச்சரியாக அந்த இடத்தில் இப்பொழுது பிரச்சினை ஏற்படும். இதனை நான் பல பேரிடம் பார்த்து இருக்கிறேன்.

நான் சொல்லுவது உங்களுக்கு நடக்கும் போது அந்த நபரை நீங்கள் அடையாளம் காண்பதும் எளிதான காரியமாக தான் இருக்கும். உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அனைத்தையும் பரிசோதனை செய்து பாருங்கள். அப்பொழுது நீங்களே இதனை கண்டுபிடித்து விடலாம். நான் எழுதுவதை அப்படியே எடுத்துக்கொண்டு உங்களின் ஜாதகத்தோடு ஒப்பிடுங்கள் அப்படி ஒப்பிடும்போது இது மாதிரி உங்களின் வாழ்க்கையில் நடந்திருக்கா என்று பார்க்கவும் அதனை பார்த்தாலே தெரிந்துவிடும் உங்கள் முன்ஜென்மத்தில் என்ன செய்திருப்பீர்கள் என்று கண்டுக்கொண்டுவிடலாம்.

இப்பொழுது நாம் செவ்வாய் கிரகத்தை வைத்து முன்ஜென்மத்தை பார்த்து வருகிறோம். செவ்வாய் ஐந்தில் நின்றால் எட்டாம் வீட்டை பார்க்கும். எட்டாம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு. செவ்வாயின் பார்வையால் என்ன நடக்கும் என்றால் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும்.

இது ஏன் இப்படி எட்டாம் வீட்டை செவ்வாய் பார்க்கிறது என்றால் ஒருவனுக்கு மரணத்தை காட்டக்கூடிய இடம் எட்டாம் வீடு. ஒருவனுக்கு மரண பயம் வந்தால் தான் அவன் எப்படி டா இந்த மரணத்தை விட்டு நாம் தப்பித்துக்கொள்ளுவது என்ற எண்ணம் ஏற்படும். அவன் தேடி செல்வது ஆன்மீகமாக இருக்கும். உங்களை அங்கே இழுத்தால் தான் உங்களுக்கு வழி தெரியும். இதனை உங்களிடம் சொல்லாமல் செய்துக்கொண்டு இருக்கிறது இந்த கிரகங்கள். 

செவ்வாய் ஐந்தில் நிற்க்கும் போது ஒருவன் ஆன்மீகத்திற்க்கு செல்லும் வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தும் ஏன் என்றால் அடிக்கடி விபத்தை சந்திப்பான். அவனுக்குள் பெரிய பயத்தை செவ்வாய் ஏற்படுத்திவிடுவார். மரணபயத்தை கொடுத்துவிடுவார். மரணத்தைப்பற்றி எண்ணி வரும் ஆன்மீகவாதிகள் தான் மிகச்சிறந்த நிலையை அடையமுடியும். 

நண்பர்களே உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை உங்களின் குடும்பத்தினர் உங்களின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறுவார்கள்.

ஒரு ஆத்மாவிற்க்கு மோட்ச பாதையை காட்டுவது என்பது உலகத்தில் நீங்கள் செய்யும் அத்தனை கர்மத்தையும் தொலைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் பல லட்சம் செய்து கோவில் கட்டலாம். பல விதத்திலும் ஆன்மீக சேவை செய்யலாம் ஆனால் ஆத்மாவின் மோட்சத்திற்க்கு பாதை காட்டிப்பாருங்கள் உலகில் உள்ள அனைத்து சேவையை விட இந்த சேவை பெரியது. அனைத்து மதத்தின் ஆணிவேர் இது. அடுத்தவர்களின் கர்மத்தை தொலைக்க நீங்கள் உதவி செய்யுங்கள். உங்களின் கர்மா படிப்படியாக குறையும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: