Followers

Tuesday, February 26, 2013

துலாம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     துலாம் ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

துலாம் ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. சனியின் வீட்டில் குரு அமருகிறார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சனியின் வீட்டில் குரு அமருவதால் கோவிலில் வேலை செய்தவர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

அடையாளம்?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார்.இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சனியின் வீட்டில் குரு அமர்வதால் வீண்பழி சுமத்தி அவரை கெடுத்திருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால் 

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் சத்ய சாயி பாபா மற்றும் குருவை வணங்கிவாருங்கள் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவார்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: