Followers

Wednesday, February 27, 2013

பூர்வ புண்ணியம் 38



வணக்கம் நண்பர்களே!
                      ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் முன்ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று ஒவ்வொரு ராசியாக பார்த்தோம். இதனை நீங்கள் படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நபர் எங்கு இருக்கிறார் என்பதை நீங்கள் தேடி அறிந்துக்கொள்ளுங்கள். அவரை பார்த்துவிட்டு அவருக்கு நீங்கள் நல்லது செய்யும்போது மட்டுமே உங்களின் பூர்வபுண்ணியத்தின் பாவத்தை போக்கமுடியும்.

இது எல்லாம் இந்த நாகரீக வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்று நீங்கள் நினைக்கலாம். என்ன தான் நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனுக்கு இறப்பு என்பது கண்டிப்பாக வந்தே தீரும். கடைசியில் இந்த வாழ்க்கை வீண் என்று வரும்பொழுது நினைக்காமால் இன்றே அதற்கான வழி என்ன என்று கண்டுபிடியுங்கள் கடவுள் கண்டிப்பாக கண் திறப்பான்.

இளைமையில் மனிதன் இருக்கும்போது நாம் இளமையில் இருக்கிறோம் அதனால் நமக்கு மரணம் வராது என்று நினைத்துக்கொண்டு இருப்பது. முதுமையில் மனிதன் இருக்கும்போது நாம் முதுமை அடைந்துவிட்டோம் அதனால் அதனைப் பற்றி நினைத்தால் பயம் வரும் அதனால் அதனை நினைக்காமல் இருப்பது இப்படி மனிதன் வாழ்க்கை போய்க்கொண்டுருக்கிறது.

உங்களின் மனைவிக்கு உங்களின் மகன் மகளுக்கு சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது உங்களின் அடுத்தபிறப்புக்கு நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று ஒரு நாள் சிந்தித்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு தெரியும் நாம் ஒன்றும் செய்யவில்லை. இதனை படித்துவிட்டாவது இன்று முதல் என்ன செய்யவேண்டும் என்று நினைத்து பாருங்கள்.

இந்த உலகத்தில் நீங்கள் சேர்த்து வைத்து ஒரு சொத்து எதுவும் உங்களின் பின்னாடி வராது. உடலில் இருந்து அரணாகயிறு கூட அறுத்துவிடுவார்கள் உங்களின் ஆத்மா மட்டுமே நீங்கள் செய்த நன்மை தீமைகளை சுமந்துக்கொண்டு செல்லும். நீங்கள் செய்த நன்மை என்ன என்று சிந்தித்து பாருங்கள் தீமை எது என்று சிந்தித்து பாருங்கள். அது மட்டுமே உங்களை பின் தொடரும். கர்மாவினையை தீர்க்க கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்துங்கள். மீண்டும் மனித ஜென்ம எடுக்க எத்தனை வருடங்கள் ஆகும் என்று உங்களுக்கு தெரியாது அதனால் எடுத்த மனித ஜென்மத்தை நல்ல முறையில் பயன்படுத்தும்போது உங்களை கடவுளை அரவணைத்துக்கொள்வார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: