Followers

Monday, February 4, 2013

மிதுனம் : ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே!
                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் மிதுன லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மிதுன லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன்.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். சுக்கிரன் ஐந்தாம் இடம் காரகம் வகிப்பதால் பெண்களுக்கு கெடுதல் செய்திருக்கலாம் அதுவும் நண்பர்களாக இருக்கும் பெண்களை கூட கெடுத்திருக்கலாம்.

சித்திரை 3 4 ம் பாதம் சுவாதி விசாகம் 1 2 3 ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டது துலாம் ராசி

அடையாளம் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருப்பார். உயரமானவாராக இருந்திருப்பார்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். வேறு மதத்தில் உள்ளவராக இருப்பார். உயரமானவராக இருக்ககூடும். கண்கள் பாம்பு கண்கள் போல் இருந்திருக்ககூடும். 

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் ராகு அமரந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். பிராமண ஜாதியில் பிறந்திருக்ககூடும். இவர் வேலை செய்வது அரசாங்க கருவூலத்தில் அல்லது கோவில் போன்ற இடங்களில் வேலை செய்திருக்ககூடும்.

எப்படி கெடுத்திருப்பார்?

காம ரீதியாக தொந்தரவு கொடுத்து அவரை கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் ராகு அமர்ந்தால்

கை தோள் மற்றும் மர்ம ஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

தொடை பாதம் கணுக்கால் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் ராகு அமரந்தால்

இதயம் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

என்ன பரிகாரம்?

வழக்கம்போல் சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு ஏதும் சொல்லமுடியாது நண்பர்களே ஏன் என்றால் உங்களுக்கு பூர்வபுண்ணியத்தில் இருந்து தான் அனைத்தும் நடைபெறும். ஜாதகத்தில் ஆணிவேர் அங்கு தான் உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு கிடையாது. யார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 

நண்பர்களே இந்த தொடரின் நோக்கம் மனித வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்ட கர்மாவை நீக்க ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தால் தான் ஆரம்பித்தேன். பல நண்பர்களின் விருப்பமும் இதில் இருப்பதால் இதனை தருகிறேன். உங்களின் விருப்பத்தையும் என்னிடம் தாருங்கள் உங்களுக்கு இதனைப்பற்றி புரியவில்லை என்றால் என்னை வந்து பாருங்கள் தகுந்த விளக்கம் தருகிறேன். அப்பொழுது உங்கள் வாழ்க்கையைப்பற்றி தெரியவரும். 

உங்களின் கர்மாவை நீக்க முயற்சி செய்யும்போதே உங்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதை நீங்களே அனுபவத்தில் இதனை உணர்ந்துக்கொள்ளலாம்.

நான் எழுதுவது என்னிடம் உள்ள தகவலில் ஐந்து சதவீதம் கூட இருக்கமுடியாது. அனைத்தும் என்னிடமே உள்ளதால் முடிந்தளவு தருகிறேன்.  உங்களுக்கு நான் தர தர வெள்ளம்போல் வந்துக்கொண்டே இருக்கிறது. 

நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: