Followers

Tuesday, February 5, 2013

கடகம் : ஐந்தில் ராகு


வணக்கம் நண்பர்களே!
                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் கடக லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கடக லக்கனத்திற்க்கு ஐந்தாவது ராசியாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். செவ்வாய் வீடு சம்பந்தப்படுவதால் சகோதரனை கூட கொன்றுருக்ககூடும்.

விசாகம 4 ம் பாதம் அனுஷம் கேட்டை ஆகிய நட்சத்திரங்களை கொண்டது விருச்சிகராசி.

அடையாளம் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் ராகு அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். பிராமண ஜாதியில் பிறந்திருக்ககூடும். 

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருக்கலாம். குள்ளமானவராக இருப்பார்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் ராகு அமரந்திருந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார். வைசிய ஜாதியில் பிறந்திருப்பார். உயரமானவராக இருந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

செவ்வாயின் வீட்டில் ராகு அமர்வதால் வெட்டுகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் ராகு அமர்ந்தால் 

இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் ராகு அமரந்திருந்தால்

கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு உயிர் போயிருக்கும்.

என்ன பரிகாரம்?

வழக்கம்போல் சம்பந்தப்பட்ட நபர் தான் பரிகாரம். கோவில்களில் மற்றும் வீடுகளில் நீங்களாகவோ செய்யும் பரிகாரம் உங்களுக்கு மனதில் ஒரு சாந்தி ஏற்படுத்துமே தவிர எதற்காக செய்தமோ அந்த விசயத்தின் வீரியம் ஒரளவு குறையும் அவ்வளவு தான். பிரச்சினையின் மூலத்தை கண்டறிந்து சரியான பரிகாரம் செய்யும் போது மட்டுமே அந்த செயல் வெற்றியடையும். மூலத்தை விட்டுவிட்டால் நீங்கள் கோவில் கட்டினால் கூட உங்களின் கர்மா தீராது

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: