Followers

Tuesday, July 19, 2016

சோதிட பலன்


ணக்கம்!
          ஒவ்வொருவரும் சோதிடபலனை சொல்லும்பொழுது அந்த ஜாதகத்தில் உள்ள பலனை ஒரளவு சொல்லமுடியும். அனைத்தையும் சொல்லிவிடமுடியாது. அதற்கு எல்லாம் காரணம் சாேதிடம் என்பது பெரிய கடல். அனைத்தையும் படித்தாலும் வாக்கு புலமை என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. துல்லியமான பலன் என்பது அனைவராலும் சொல்லமுடியாது என்பது எனது கருத்து.

ஒவ்வொரு மனிதனும் தனியாக தான் பிறக்கிறான். அவனைபோல் வேறு யாரும் கிடையாது என்பது மட்டும் உண்மை. சோதிடமும் அப்படி தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசப்படும். நாம் எப்படி துல்லியமான பலனை கொடுக்கமுடியும்? ஒரளவுக்கு கொடுக்கமுடியும்.

மறைவிடம் என்று சொல்லக்கூடிய வீடுகளில் கிரகங்கள் தீயபலன்களை கொடுக்கும் என்று சொல்லிருந்தாலும் அனுபவத்தில் நன்றாக இருப்பவர்கள் அதிகம் பேர்கள் இருக்கின்றார்கள். அதனால் சோதிடபாடத்திற்க்கும் அனுபவத்திற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

சோதிடத்தை தொழிலாக செய்துக்கொண்டு வரும்பொழுது நிறைய ஜாதகங்களை பார்ப்பதாலும் தெய்வீகஅருள் இருப்பதாலும் ஒரு சில வார்த்தைகள் அதுவாகவே வந்துவிடும். அப்படி வருவதும் நடக்கும். நூறு சதவீதம் துல்லியமான பலன் என்பது வராது.

பிற சோதிடர்கள் சொல்லுகின்றார்களோ என்பது தெரியாது என்னால் நூறு சதவீத பலன் என்பது சொல்லிவிடமுடியாது. ஒரளவு சொல்லும் பலன் என்பது நடக்கும். இது தான் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: