Followers

Wednesday, July 20, 2016

புத்தி கிரகம் புதன்


ணக்கம்!
          ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு தகுந்தவாறு பலன்களை பார்த்து வருகிறோம். இன்று புதன்கிழமை. புதன்கிழமையை சார்ந்து பதிவை பார்க்கலாம். 

ஒரு மனிதன் கல்வி கற்றால் அவன் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பார்கள். அறிவை கிரகம் புதன் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவர்க்கு சிறந்த அறிவு இருக்கும் என்று சோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது.

நிறைய விசயங்களை மனம் சேகரித்துவிட்டால் அவன் அதனை கொண்டு தன்னுடைய வாழ்க்கை மேம்படுத்திக்கொள்ளமுடியும். அனைத்தையும் தெரிந்து ஏதாே ஒரு வழியை தேர்ந்தெடுத்து அந்த வழியில் செல்லும்பொழுது அனைத்தையும் சாதித்துவிடுகிறான். 

சோதிடசாஸ்திரத்தில் கூட புதன் நன்றாக அமையபெற்றவர்கள் யாரிடமும் உதவி கேட்காமல் தனியாக முன்னேற்றம் அடைந்துவிடுவார்கள் என்று சொல்லியுள்ளார்கள். 

புதன் கல்விக்கு காரகன் வகிக்கிறார் என்பதால் கல்விதுறையில் திகழ புதன் கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமையவேண்டும். இன்று கல்விதுறையை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் புதன் நன்றாக இருக்கின்றது என்று நினைக்கவேண்டாம். அவர்களிடம் செல்வம் இருக்கின்றது. கல்வியை விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

உடனடி பலன்

எந்த ஒரு கிரகமும் தன்னுடைய பலனை கொடுப்பதற்க்கு நாள்கள் எடுக்கும் ஆனால் புதன் உடனே பலனை கொடுத்துவிடும். புதன்தசா ஆரம்பித்த உடனே பலனை எதிர்பார்க்கலாம்.

இரண்டு கிரகங்கள் தன்னுடைய பலனை உடனே கொடுக்கும். ஒன்று சந்திரன் அடுத்த ஒன்று புதன். இந்த இரண்டு கிரகங்களும் உடனே தசாபலனை அல்லது கோச்சாரபலனை வழங்ககூடிய கிரகங்கள்.

குலதெய்வம்

பல பேர்களிடம் நான் சொல்லிருக்கிறேன் குலதெய்வ வழிபாட்டை புதன்கிழமை அன்று செய்யுங்கள் என்று சொல்லிருக்கிறேன். குலதெய்வம் நல்ல அறிவை கொடுத்து உங்களை உயர்த்தும் என்பதற்க்காக சொல்லிருக்கிறேன்.

வக்கிரகதி
          புதனுக்கு வக்கிரகதில உண்டு. ஒருவருக்கு புதன் கிரகம் வக்கிரகமாக அமையபெற்றால் அவர் தீவிரவாதி போல் இருப்பார்கள். அவர்களின் செயல்பாடு அனைத்தும் தீவிரவாதி போல் செயல்படுவார்கள்.

பல வில்லங்க வேலைக்கு காரணமாக இருப்பவர்களே இவர்களாக தான் இருப்பார்கள். பல போலி பத்திரம் மற்றும் போலியாக பேப்பர்களை தயார் செய்பவர்கள் அனைவரும் புதன் வக்கிரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

தந்திரமூளை என்று சொல்லுகின்றார்கள் அல்லவா அதற்கு எல்லாம் புதன் தான் காரகமாக இருக்கின்றார். பல தந்திரவேலையை செய்து பிழைத்துவிடுவார்கள்.

தசா
    புதன் தசா ஒருவருக்கு நடைபெற்றால் அவர்க்கு புத்தி வழியாக சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும். புதன் தசா முழுவதும் தரகர்கள் போல் வேலை செய்து பிழைப்பு நடத்தும் வாய்ப்பு உருவாகும்.

உங்களுக்கு புதன் தசா நடந்து உங்களுக்கு நல்ல பலன் நடந்தால் சரி. தீயபலன்கள் நடந்தால் உடனே உங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்கு தீர்வை கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: