Followers

Monday, July 25, 2016

புதிய அறிவிப்பு


ணக்கம்!
          ஒவ்வொருவரின் வேண்டுதலையும் அனுப்பி சொல்லிருந்தேன். பலர் அனுப்பியுள்ளனர் இதுவரை அனுப்பாதவர்களும் தங்களுடைய வேண்டுதலை அனுப்பி வையுங்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்க்கு முன்கூட்டியே தகவலை தருவது உண்டு. பல நண்பர்கள் இப்படி சந்தித்து உள்ளனர். அனைவரும் பணம் செலுத்தி தங்களின் ஜாதகத்தை பார்ப்பார்கள். 

இலவச சேவை புது முயற்சியாக தொடங்கியுள்ளேன். இதற்கு என்று பல நண்பர்கள் உதவி செய்துள்ளனர். அதாவது ஒவ்வொரு ஊருக்கும் செல்வதற்க்கு தேவையான பண உதவியை அந்தந்த ஊர்களில் உள்ள ஏற்கனவே நமது ஜாதக கதம்ப நண்பர்கள் செய்துள்ளனர். 

உங்களின் ஊர்களுக்கு வரும்பொழுது உங்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டி இலவச ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். இலவச ஆலோசனை என்பதை எனக்கு முன்கூட்டியே தெரிவித்துக்கொள்ளுங்கள். அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இலவச சேவையில் கேலியான கேள்விகளை தவிர்க்க பாருங்கள். டைம் பாஸ் செய்வதற்க்கு உள்ள இடம் அது கிடையாது. அந்த நேரத்தில் ஒரு மனிதனுக்கு நம்மால் உதவி முடியும் என்பதை புரிந்துக்கொண்டு கேள்விகளை கேளுங்கள். 

எப்படி சாத்தியப்படுகிறது ?

நமது நண்பர்கள் ஒரு சிலர் நல்ல ஆதரவை எனக்கு தருகின்றனர். ஒரு சில பரிகாரம் மற்றும் பூஜையில் பல செல்வந்தர்கள் நிறைய பணத்தை கொடுத்து உதவுகின்றனர். அவர்களால் இது எல்லாம் சாத்தியப்படுகிறது. 

ஒவ்வொரு ஊருக்கும் வரும்பொழுது அந்தந்த ஊர்களில் உள்ள பழைய நண்பர்கள் மறுமுறையும் என்னை வந்து சந்தித்து விடுங்கள். உங்களின் வளர்ச்சிக்கு அது உதவும். 

இந்த வார இறுதியில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: