Followers

Tuesday, July 19, 2016

குரு பூர்ணிமா


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை நாம் பலப்படுத்தவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்போம் ஆனால் நமக்கு முக்கியமான ஒரு விசயம் மட்டும் செய்வதற்க்கு ஞாபகம் இருப்பதில்லை. தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார்களாக என்பதும் தெரியவில்லை.

இன்று குரு பூர்ணிமா. ஒவ்வொரு மனிதனும் தனக்கு சொல்லிக்கொடுத்த ஒவ்வொறு விசயத்திற்க்கும் குருவிற்க்கு நன்றி சொல்லக்கூடிய ஒரு நாள். உங்களின் குருவிற்க்கு நீங்கள் நன்றி சொன்னீர்களாக என்று தெரியவில்லை. இந்த பதிவு இப்பொழுது எழுதுவதற்க்கு காரணம் எத்தனை பேர் இதனை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பதற்க்காக காலம் கடந்து எழுதுகிறேன்.

இப்படிப்பட்ட விசயத்தை எல்லாம் நீங்கள் செய்யும்பொழுது தான் உங்களின் பாக்கியஸ்தானம் பலப்பட்டு உங்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் அனைத்து காரியமும் வெற்றி பெறும்.

இந்த உலகத்தில் கற்றுக்கொடுக்க அனைவரும் தயாராக இருக்கின்றனர். அதனை ஏற்க நாம் தான் தவறவிடுகிறோம். உங்களின் மனசாட்சிபடி இன்று உங்களின் குருவிற்க்கு நன்றி சொல்லி அவரின் ஆசியை பெற்றால் நீங்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

இன்று மறந்தால் கூட பரவாயில்லை நாளை சென்று உங்களின் குருவிற்க்கு வேண்டியதை வாங்கி அன்பு பரிசாக வழங்குங்கள். உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: