Followers

Sunday, July 3, 2016

ஜாதகம் வேலை செய்கிறதா?


வணக்கம்!
          ஒரு சிலருக்கு ஜாதகத்தில் தசாநாதன் வேலை செய்யாமல் போய்விடும். தசாநாதன் நன்றாக வேலை செய்தால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை வேலை செய்யாவிட்டால் அவர்களின் பாடு திண்டாட்டமாக இருக்கும்.

தசாநாதனும் வேலை செய்யாமல் போய்விட்டு கோச்சாரபலனும் ஒன்றும் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றால் ஜாதகத்தில் பெரிய பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லலாம். பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் அதே பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தையே பல வருடங்களாக வாங்கிக்கொண்டு இருக்கிறார் அதற்கு மேல் சம்பளம் வாங்கமுடியவில்லை அதாவது சம்பாதிக்க முடியவில்லை என்றால் ஜாதகம் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டியது தான்.

ஒரு சிலருக்கு ஒன்றுமே வேலை செய்யாமல் அவர்கள் சாப்பாட்டிற்கே திண்டாடுகிறார்கள் என்றால் அது பெரிய பிரச்சினை என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஜாதகத்தில் கிரகங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக ஒரு சின்ன முன்னேற்றமாவது இருந்துக்கொண்டு இருக்கும். ஜாதகத்தில் கிரகங்கள் வேலை செய்யவில்லை என்றால் ஒரு வித முன்னேற்றங்களும் இருக்காது.

கிரகங்கள் வேலை செய்யவில்லை என்றால் வேலை செய்யது வைக்கமுடியுமா என்று கேட்கதோன்றும். வாழ்வில் எதுவும் இல்லை என்றால் எதையாவது முன்னேற்றம் அடைவதற்க்கு செய்து தானே ஆகவேண்டும். அப்படி ஒரு சில பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் இருக்கின்றன அதனை நீங்கள் செய்தால் இதில் இருந்து விடுபட்டுவிடலாம்.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும்பொழுது நம்மால் எப்படி பரிகாரங்கள் எல்லாம் செய்யமுடியும் என்று நினைப்பவர்கள். முதலில் உங்களுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்று வாருங்கள். முடிந்தளவு அருகில் உள்ள கோவில்கள் எல்லாம் நடந்தே சென்று வந்துவிடுங்கள்.

பெளர்ணமி அல்லது அமாவாசை நாட்களில் சிவன் கோவில்களில் கிரிவலம் செல்லுங்கள். அப்புறம் ஏதாவது சாமியார் இருந்தால் அவர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குங்கள். குலதெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்யுங்கள்.

இது உங்களை மேலே தூக்கிவிடும் அதன் பிறகு புகழ்பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றுவரலாம். கடைசியில் பூஜை பரிகாரங்கள் செய்துக்கொள்ளலாம். முதலில் நீங்கள் இதில் இருந்து ஆரம்பித்தால் படிப்படியாக மேலே சென்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: