Followers

Saturday, September 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
           தினந்தோறும் காலையில் எழுந்து குளித்துவிட்டு உங்களின் பூஜையறையில் விளக்கேற்றி நன்றாக ஐந்து நிமிடம் பூஜையறையில் செலவிட்டாலே போதுமானது. உங்களின் தினசரி வாழ்க்கை எந்த வித இடைஞ்சல்கள் இல்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.

நாம் தினந்தோறும் செய்யும் பூஜையில் நாம் கவனித்தை திருப்பிவிடுவதால் நம்மால் நாம் செய்த பூஜையின் பலனை பெறுவதில்லை. கவனம் சிதறியவுடன் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் பூஜையில் வைப்பதில்லை. உங்களால் முடிந்தவரை காலையில் கொஞ்சம் மூச்சு பயிற்சி செய்துவிட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

தினமும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தபிறகு தான் மற்ற வேலைகளை தொடங்கவேண்டும் ஆனால் இன்றைய காலத்தில் இது சாத்தியப்படகூடிய ஒரு வேலையாக இருக்காது என்பதால் வீட்டில் பூஜை செய்தால் போதுமானது என்கிறார்கள்.

ஆன்மீகவாதிகளால் கூட கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து முடித்துவிட்டு தினசரி வாழ்க்கை வாழமுடியாது அப்படி இருக்கின்றது இன்றைய காலம். உங்களால் முடிந்தால் தினசரி ஒரு கோவிலை வழிபட்டுவிட்டு உங்களின் தினசரி வேலையை தொடங்கலாம்.

தினசரி வரவேண்டிய பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருக்கும் ஆனால் அந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு யோசனையும் உங்களுக்கு எளிதில் தோன்றி நீங்கள் சமாளிக்கும் ஐடியாவை தினசரி வழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: