Followers

Tuesday, September 25, 2018

ஆன்மீகம்


ணக்கம்!
          மனிதனுக்கு பிரச்சினை வருவது இயற்கையான ஒன்று. இதனை சோதிடவிதியை வைத்து நாம் ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் ஒவ்வொன்றையும் செய்து வருகிறோம். பரிகாரம் என்பதையும் தாண்டி பல விசயங்களை அவ்வப்பொழுது நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

பிரச்சினை வருபவர்களும் சரி பிரச்சினை வராதவர்களும் சரி அவ்வப்பொழுது ஆன்மீக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் நீங்கள் பங்களிப்பை செய்யவேண்டும். பல கோவில்கள் இருக்கின்றன இந்த கோவில்களில் எல்லாம் அடிக்கடி நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும்.

நாம் கோவிலுக்கு போகின்றோம் ஆன்மீக நிகழ்வுகளில் எல்லாம் பங்குக்கொள்கிறோம் இது அனைத்தும் பிரச்சினை வராவே வராது என்பதில்லை மாறாக நமது ஆத்மாவுக்கு தேவையான நல்லதை கொடுக்கிறோம்.

பல ஜென்மங்களாக கடந்து வந்த ஆத்மாவிற்க்கு ஒரு எனர்ஜி கொடுக்கும் வேலையை தான் செய்துக்கொண்டு இருக்கிறோம். பெரியளவில் சக்தி படைத்தவர்களிடம் ஒன்றுமே இருக்காது. அதாவது அவர்களிடம் பணம் மற்றைய செல்வங்கள் இருக்காது. அவர்களுக்கு தேவை ஆத்மா சக்தியோடு இருக்கவேண்டும். இதனை தான் அவர்கள் செய்வார்கள்.

நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கின்றீர்கள். உங்களின் மீது உங்களின் தலைமைக்கு ஒரு நல்ல ஈடுபாடு உருவாதற்க்கு ஆன்மீகம் துணைபுரியும். நல்ல சக்தி படைத்தவர்களுக்கு தான் வாய்ப்புகளும் தேடிவரும்.

உங்களை சுற்றி இருப்பவர்கள் குறிப்பாக உங்களின் உறவினர்கள் இவனுக்கு எப்பொழுது பார்த்தாலும் இது தான் வேலை என்று இருக்கிறான் என்று சொல்லுவார்கள். இதனைப்பற்றி கவலைப்படாமல் உங்களின் வேலையை மட்டும் செய்துக்கொண்டு இருங்கள்.

நவராத்திரி சிறப்பு அம்மன் யாகத்திற்க்கு பங்குக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: