Followers

Wednesday, September 19, 2018

அக்னி


வணக்கம்!
          காலம் காலமாக அக்னிக்கு ஆன்மீகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அக்னியை கொண்டு இறைவனை அடையமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் அக்னிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைத்து ஆன்மீகமும் இருக்கும்.

பண்டைய காலத்தில் இருந்து தற்பொழுது வரை ஆன்மீகத்திற்க்கு என்று அக்னியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அக்னியை வளர்க்க வேண்டும் என்பதற்க்காக தான் அனைத்து யாகத்திற்க்கும் முக்கியத்துவம் இருக்கின்றது.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு யாகமும் உங்களுக்கு அதிகளவில் பயனை கொடுக்கும் என்பதால் யாகத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அக்னி வழியாக அது இறைவனை அடைந்து உங்களுக்கு பயன் அதிகமாக உடனே விரைந்து கிடைப்பது போல இருக்கும்.

நாம் யாகம் வளர்த்தாலும் பிற மதத்திலும் அக்னிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பாதை வேறாக இருக்கலாம் ஆனால் செய்யும் வழி எல்லாம் ஒன்றாக தான் இருக்கின்றது. அதாவது அக்னிக்கு முக்கியத்துவம் கொடுப்பது. 

வெளிநாட்டில் கூட அக்னியை வளர்த்து அதனை சுற்றி ஆடல் பாடல் செய்வார்கள். அது அவர்களுக்கு ஏதாே ஒரு விதத்தில் புத்துணர்வை தருகின்றது. நாம் அக்னியோடு இணைக்கும்பொழுது நம்மை அது சுத்திகரிக்கின்றது என்று சொல்லலாம். 

அக்னியை கொண்டு நம்முடைய சக்தி வழியாக பல நன்மைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு அனைவருக்கும் அது கிடைக்கவேண்டும் என்பதற்க்காக இலவசமாகவும் செய்கிறோம். உங்களை நேரில் வந்து பங்குக்கொள்வது போல செய்யும் காலம் வெகு விரைவிலும் செய்யலாம் என்று இருக்கிறேன். இதுவரை அந்த யோசனை இல்லாமல் இருந்தது. இனிமேல் உங்களை நேரில் வந்து கலந்துக்கொள்வது போல செய்யவேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. அம்மன் அருளால் அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: