Followers

Friday, September 28, 2018

மூன்றாம் பிறை வழிபாடு


வணக்கம்!
          உணர்வு பூர்வமாக கொண்டு செல்வது தான் ஆன்மீக வழிபாடு. உங்களின் உணர்வுகளை கடவுளிடம் செலுத்தினாலே அது உங்களுக்கு நிறைய கொடுக்கும். வாய்வழியாக சொல்லுவதை விட உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்தால் நீங்கள் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பீர்கள். பெரும்பாலான வழிபாடுகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும்.

மூன்றாம்பிறை வழிபாடு சிறந்த வழிபாடாக இருக்கும். மூன்றாம் பிறையை காண்பது சிறந்தது என்பார்கள். நம் மதத்திலும் சரி பிற மதத்திலும் சரி மூன்றாம் பிறைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள்.

மாலை நேரத்தில் உங்களின் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றி விட்டு சாமி கும்பிட்டுவிட்டு கற்பூரம் ஆராத்தி காட்டிவிட்டு அந்த ஆராத்தியை அப்படியே வெளியில் வந்து வானத்தை நோக்கி மூன்றாம் பிறையை நோக்கி காட்டிவிட்டு அப்படியே மறுபடியும் உள்ளே சென்று சாமி கும்பிடுங்கள்.

இது ஒரு உணர்வு பூர்வமான ஒரு வழிபாடு தான் இதில் மந்திரங்களை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உணர்வு பூர்வமாக நாம் செய்யும் இந்த செயல் உங்களுக்கு நிறைய நல்ல வாய்ப்பை கொண்டு வரும்.

நமது சோதிடத்தின் அடிப்படை சந்திரனை கொண்டு தான் இருக்கின்றது. சோதிடத்தின் வழியாக நமக்கு நல்லது நடப்பதற்க்கும் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து பயன் பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: