Followers

Saturday, September 22, 2018

பிரச்சினை தீர பரிகாரம்



வணக்கம்!
          ஒவ்வொரு சிறிய பிரச்சினை வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே அதற்கு தகுந்த ஏற்பாட்டை செய்துவிடவேண்டும். அதாவது உங்களுக்கு ஒரு சின்ன பிரச்சினை வந்துவிட்டால் அது எதற்க்காக வருகின்றது அதனை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு செயல்பட்டால் அதில் இருந்து தப்பித்துவிடலாம்.

ஏதோ ஒரு கிரகத்தின் வழியாக தான் பிரச்சினை உருவாகும் அதனை நாம் புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் முன்கூட்டியே செயல்பட்டுவிடவேண்டும். சின்ன பிரச்சினையாக உருவாகி அது பெரியளவில் கொண்டு சென்றுவிடும். பிரச்சினையை ஆரம்பத்திலேயே முடித்துவிட்டால் நல்லது.

உங்களின் சகோதர் ஒரு பிரச்சினையை உருவாக்கின்றார் என்றால் சகோதரை காட்டக்கூடிய செவ்வாய் கிரகம் எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். செவ்வாய் நன்றாக இல்லை என்றால் உடனே செவ்வாய் கிரகத்திற்க்குரிய முருகன் கோவில் சென்று ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.

கோவிலுக்கு சென்று வந்த பிறகு நேரடியாக உங்களின் சகோதரரை கூப்பிட்டு பேசிவிடலாம். கோவிலுக்கு சென்று வந்த பிறகு மறுநாள் பேசும்பொழுது அவர் சாந்தமாக மாறிவிடுவார். நீங்களும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினை முடிந்துவிடும்.

நான் சொல்லுவது ஒரு சின்ன உதாரணம் உங்களின் வாழ்வில் வரக்கூடிய அனைத்து பிரச்சினையும் நீங்கள் இது போலவே சரி செய்துக்கொண்டால் பெரும்பாலும் பெரிய இழப்பு உங்களுக்கு வந்துவிடாது.

நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு கலந்துக்கொள்ளபவர்கள் முன்கூட்டியே என்னை தொடர்புக்கொள்ள சொல்லிருந்தேன். காலம் தாழ்த்தாமல் உடனே தொடர்புக்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: