Followers

Friday, September 21, 2018

பொறாமையை தரும் கிரகங்கள்


வணக்கம்!
          பொறாமை என்ற எண்ணம் உருவாவதற்க்கு காரணமாக இருப்பது எந்த கிரகத்தால் என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். பொறாமை இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கின்றது.

ஒரு சில நாட்டினருக்கு தகுந்தமாதிரி இந்த பொறாமை எண்ணம் இருக்கும். சோதிடத்தில் மறைவுஸ்தான அதிபதிகள் இந்த எண்ணத்தை உருவாக்கும் என்று சொல்லுவார்கள். மறைவுஸ்தான அதிபதியில் அதிகமாக மூன்றாவது வீடு மற்றும் ஆறாவது வீட்டு அதிபதிகள் தான் அதிகமாக பொறாமை எண்ணத்தை உருவாக்கின்றனர்.

பொறாமை எண்ணம் என்ற ஒன்று இருப்பதில் தான் உலகத்தில் முன்னேற்றம் குறைவாக இருக்கின்றது என்று சொல்லலாம். பொறாமை எண்ணம் இல்லை என்றால் இன்னமும் நிறைய முன்னேற்றங்களை இந்த உலகம் கண்டு இருக்கும்.

சோதிடத்தில் ஒருவருக்கு மூன்றாவது வீட்டு தசா நடந்தால் அவர்கள் அடுத்தவர்களை பார்த்து அதிகமாக பொறாமை கொள்வார்கள். அடுத்த வீட்டில் இருப்பவர்கள் இவர்களின் கண்ணில் இருந்து தப்புவது கடினமாக இருக்கும்.

உலகத்தில் பொறாமை அதிகமாக தான் இருக்கும் என்ன செய்வது இந்த உலகத்திற்க்கு வந்துவிட்டோம் இதனை எல்லாம் மீறி தான் நாம் செயல்படவேண்டியிருக்கும். நல்ல திருஷ்டி சுத்தி போட்டுக்கொண்டு உங்களின் முன்னேற்றத்தை மட்டும் பாருங்கள். தானாகவே அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு

No comments: