Followers

Tuesday, September 4, 2018

நவ அம்மன் (சண்டி) பொது யாகம்


வணக்கம்!
          அம்மன் பூஜை முடிந்தபிறகு நவ அம்மன் (சண்டி)பொது யாகம் நடைபெற இருக்கின்றது. இந்த நவ அம்மன்  (சண்டி)பொது யாகம் இலவசமாக நடைபெற இருக்கின்றது. அவர் அவர்களின் வேண்டுகோள் அவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை தற்பொழுது இருந்து அனுப்பலாம்.

நவ சண்டி பொது யாகத்திற்க்கு அவர் அவர்கள் விருப்படுகின்ற காணிக்கை அனுப்பலாம். இலவச சேவை தான் விருப்படுகின்றவர்கள் காணிக்கை செலுத்துபவர்களும் செலுத்தி வைக்கலாம். இலவசமாக அனுப்புகிறோம் என்று தயங்காமல் அனுப்பி வைக்கலாம். 

இலவச சோதிடத்திற்க்கு ஜாதகம் அனுப்பியவர்களுக்கு இந்த வாரத்தில் சோதிடபலனை சொல்லிமுடித்துவிடுகிறேன். தன்னை இன்னமும் கூப்பிடவில்லை என்று இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த வாரத்தில் கூப்பிடுகிறேன். 

ஏற்கனவே நடந்த நவஅம்மன் (சண்டி) யாகத்திற்க்கு இதுவரை அனுப்பியவர்கள் கூட இந்த யாகத்தில் பங்கு பெறலாம். தங்களின் வேண்டுதல்களையும் அனுப்பி வைத்துவிடுவது நல்லது. வேண்டுதல்கள் சொல்லமுடியாது என்று நினைப்பவர்கள் சண்டி யாகம் நடைபெறும் காலத்தில் வேண்டுதலை மனதில் வையுங்கள்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் தங்களின் வேண்டுதல் மட்டும் அனுப்பி வையுங்கள். தங்களுக்கும் சேர்த்து பிராத்தனை செய்யப்படும்.  தங்களுக்கு எப்பொழுதும் முன்னுரிமை கொடுத்து செய்யப்படும்.

நவ அம்மன் பொது யாகம் அடுத்த மாதத்தில் நடத்தலாம் என்று தான் நினைத்து இருந்தேன். அடுத்த மாதம் நவராத்திரி நடைபெறுவதால் இந்த யாகத்தை இந்த மாதத்தில் நடத்துகிறேன். இலவசமாக தான் இந்த யாகம் நடைபெறுவதால் உங்களுக்கு பளுவாக இருக்காது. உடனே தங்களைப்பற்றிய நான் கேட்ட விபரங்களை அனுப்பி வையுங்கள்.

இலவசமாக நடந்தாலும் உங்களால் முடிந்த தர்மத்தை நீங்களே யாகம் முடிவடைவதற்க்கு முன்பு செய்துவிடுங்கள்.  உங்களின் ஊரிலேயே அல்லது வெளியூரிலேயே அதனை செய்துவிடுங்கள். தர்மம் இல்லாமல் எந்த காரியமும் செய்யகூடாது என்ற ஒரு விதி என்னிடம் இருப்பதால் இதனை நீங்களே செய்துவிடுவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: