Followers

Thursday, September 6, 2018

செல்வம் கொழிக்க செய்யும் எளிய பரிகாரம்


வணக்கம்!
          ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்த நல்ல விசங்களை நாம் கவனித்து அது சரியாக இருக்கும்பொழுது அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வேன். ஒரு சில வீடுகளில் அவர்களின் தாய் தந்தை செய்யும் செயல் அவர்களின் வாரிசுகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுத்துவிடும்.

ஒருவரின் தாய் அல்லது தந்தை ஒரு வீட்டில் எந்த நேரமும் விளக்கு எரிவது போல் செய்து வந்தார்கள் என்றால் அவர்களின் வாரிசு கண்டிப்பாக பெரிளயவில் வாழ்வார்கள். பூஜையறையில் மட்டும் இல்லை சும்மா வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வந்தாலே போதும் அது பல நல்ல செயல்களை செய்துவிடுகின்றது.

கிராமபுறங்களில் அந்த காலத்தில் எல்லாம் அரிக்கண் லைட் என்று சொல்லக்கூடிய விளக்கை தான் ஏற்றி வைப்பார்கள். இந்த விளக்கே அவர்கள் ஒளியை குறைத்து விடிய விடிய எரிய வைப்பார்கள். இதனை செய்த வீடுகள் எல்லாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றது.

இன்று அரிக்கண் விளக்கை எல்லாம் கூட ஏற்ற வேண்டாம் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தாலே போதுமானது. வீடு இருளில் இல்லாமல் ஒரு தீபம் எரிந்துக்கொண்டு இருந்தால் போதுமானது. கண்டிப்பாக உங்களின் வாரிசுகள் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார்கள்.

எண்ணெய் விலை அதிகமாக இருக்கின்றது என்று எல்லாம் கவலைப்படவேண்டாம். இது ஒரு அத்தியாவசமான செலவாக ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள். இதன் பலன் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: