Followers

Saturday, September 1, 2018

குலதெய்வ வழிபாடு


வணக்கம்!
          ஒவ்வொரு இடத்திலும் சரி குலதெய்வ வழிபாட்டை அதிகமாக சொல்லிருக்கிறேன். குலதெய்வத்திற்க்கு உள்ள வழிபாட்டு முறைகளை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள் என்றும் அதற்குரிய வழிபாட்டு முறைகளை எல்லாம் சொல்லிருக்கிறேன். இதனை எல்லாம் நீங்களும் செய்துக்கொண்டு வருகின்றீர்கள்.

பல இடத்திலும் நான் கேட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். ஒரு சோதிடர் அல்லது ஆன்மீக வழியில் உள்ளவர்கள் உங்கள் வீட்டிற்க்கு அல்லது நீங்கள் அவரை ஏதோ ஒரு காரணத்திற்க்காக நீங்கள் பார்த்து உங்களின் சந்தேகங்களை கேட்டால் அவர்கள் சொல்லும் வார்த்தை உங்களுக்கும் உங்களின் வீட்டிற்க்கும் குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

உண்மையிலேயே குலதெய்வ அருளை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூட குலதெய்வ அருள் இல்லை என்பார்கள். பெரும்பாலும் ஆன்மீகவாதிகள் கடைபிடிக்கும் வார்த்தை உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லிவிடுவது.

குலதெய்வ அருள் இருக்கும் வீட்டிற்க்கு கூட இப்படிப்பட்ட வார்த்தை யை அடித்துவிடுவது பலர் வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். குலதெய்வ அருள் இல்லாத காரணத்தால் தான் உங்களுக்கு எல்லாம் இப்படி நடக்கின்றது என்று சொல்லுகின்றனர்.

தீமைகள் நடப்பதற்க்கும் குலதெய்வ அருள் இல்லை என்று சாெல்லுவது எல்லாம் தவறான ஒன்று என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். பத்து ஆன்மீகவாதியை சந்தித்தால் ஒன்பது பேர் குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். 

குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லுவதை எல்லாம் நம்பாமல் உங்களின் தினசரி செய்யும் ஆன்மீகபணி எல்லாம் செய்யுங்கள். உங்களின் குலதெய்வத்தை தொடர்ச்சியாக வழிபட்டு வாருங்கள்.

அம்மன்பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். விரைவில் அம்மன் பூஜை செய்யப்பட இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: