Followers

Monday, September 24, 2018

நவ அம்மன்(சண்டி) யாகம் நிறைவு


வணக்கம்!
          இன்றோடு நவ அம்மன் யாகம் நிறைவு பெறுகின்றது. அனைவருக்கும் தங்களின் வேண்டுகோளை அம்மனிடம் வைத்திருக்கிறேன். பல பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லி பலர் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பி வைத்தார்கள். பங்குக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த மாதம் நடைபெறும் நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கும் கலந்துக்கொள்ள அழைக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு என்று ஒதுக்கிய நாள்களில் நவராத்திரி மிக முக்கியமான நாட்களாக இருக்கின்றன. சிவனுக்கு ஒரு நாள் பெருமாளுக்கு ஒரு நாள் அம்மனுக்கு மட்டும் ஒன்பது நாட்கள் வைத்திருக்கின்றனர்.

ஒன்பது நாட்களும் அம்மனுக்கு என்று ஒதுக்கி அம்மனின் அருளை பெறுவதற்க்கு என்று வைத்திருக்கின்றனர். அம்மனின் அருளை பெறுவதற்க்கு நாம் செய்யும் இந்த யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

இந்த வருடமும் அம்மனுக்கு என்று சிறப்பாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனைப்பற்றி பல பதிவுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை அனைவரும் இந்த நவராத்திரி அம்மன் யாகத்தை செய்ய முனையுங்கள் என்று சொல்லுகிறேன்.

அனைவரும் முனையுங்கள் என்று சொல்லுவது முயன்று பார்த்தால் தான் அதற்கு நீங்கள் தயாராக முடியும். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அதுவாகவே அனைத்தும் நடைபெற ஆரம்பிக்கும் என்பதற்க்காக அனைவரும் முயலுங்கள் என்று சொல்லுகிறேன்.

காலம் தாழ்த்தாமல் உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: