Followers

Wednesday, September 5, 2018

தோஷங்களை போக்க பரிகாரம்


வணக்கம்!
          மனிதனின் பாவங்களை மற்றும் தோஷங்களை எல்லாம் போக்குவதற்க்கு மரங்கள் செடிகளுக்கு அதிக சக்தி உண்டு. அதாவது நம்முடைய தோஷத்தை போக்குவதற்க்குள்ள வழிகளை அது செய்யும் என்று சொல்லுகிறேன்.

ஆதிகாலத்தில் மனிதர்கள் தெய்வங்களை மரத்தில் மற்றும் செடிகளில் வைத்து தான் வணங்கி வந்தனர். இன்றும் பல இடங்களில் அப்படி இருக்கின்றது. இதனை நன்றாக புரிந்துக்கொண்டு பலர் இன்றும் செயல்படுகின்றனர். உருவவழிபாடுகள் தோன்றிய பிறகு கோவிலில் தலவிருட்சம் என்று சொல்லி மரத்தை வழிபடுகின்றனர்.

இதனை நன்கு அறிந்து வீட்டிலேயே துளசி செடிகளை வளர்க்க ஆரம்பித்தனர். துளசி செடிக்கு தண்ணீர் விடுகிறேன் என்று சொல்லி தண்ணீர் விட்டு அதனை வணங்கி அவர்களின் தோஷத்தை எல்லாம் போக்கிவிடுகின்றனர்.

துளசி செடிகள் போன்ற அனைத்து வகையான மரங்கள் மற்றும் செடிகளுக்கும் நமது தோஷத்தை போக்கும் தன்மை இருக்க தான் செய்கின்றன. இதனை அறிந்துக்கொண்டு நாம் வீட்டிலேயே வளர்க்கலாம் அல்லது கோவிலுக்கு செல்லும்பொழுது தலவிருட்சத்தை வணங்கி வரலாம்.

பெரிய ஞானிகளை கூட மரங்கள் தான் உருவாக்கி இருக்கின்றன என்று நான் சொன்னால் அதனை நீங்கள் நம்பபோவதில்லை. இதனை ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: