Followers

Sunday, September 9, 2018

பித்ருதோஷம்


வணக்கம்!
          இராகு கேது பித்ருதோஷத்தை ஒருவருக்கு கொடுத்தால் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லுங்கள் என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார்.

இராகு கேதுவால் பித்ருதோஷம் வந்தால் அவர் பித்து பிடித்ததுபோல   தான் செயல்படுவார். எந்த நேரமும் ஏதோ ஒரு சிந்தனை வந்துக்கொண்டு தான் இருக்கும். மனதை முழுவதுமாக ஆக்ரமித்து அவர்களின் செயல்பாடுகளை முடக்கிவிடும் தன்மை இராகு கேதுவிற்க்கு உண்டு.

இராகு கேது தரும் பித்ருதோஷம் மட்டும் அல்ல பலரின் வாழ்க்கையில் இராகு கேது ஏதாவது ஒரு வழியில் பித்ருதோஷம் போல ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் கொடுக்க தான் செய்யும். இதனை பலர் அனுபவப்பட்டு இருக்கலாம்.

பித்ருதோஷம் கொஞ்சம் அதிகமாக சென்று தாக்குதலை நடத்தி ஒருவரை சின்னாபின்னமாக மாற்றுகிறது. ஒருவர் பைத்தியநிலைக்கு செல்ல வைத்து அடுத்தவர் ஏளனம் செய்யும் அளவிற்க்கு ஒருவரை கொண்டு செல்கிறது என்றால் அது பித்ருதோஷமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவருக்கு எந்த வேலையும் இல்லாமல் எதனை எடுத்தாலும் அதில் தோல்வியுற்று அவர் மிகுந்த கஷ்டத்தில் இருந்தால் அவர்க்கு பித்ருதோஷம் இருக்கின்றது என்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். நான் சொன்னது எல்லாம் அனுபவத்தில் சொல்லிருகிறேன் விதிகளை வைத்து சொல்லவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: