Followers

Monday, September 3, 2018

மரணநிகழ்வுகளை தரும் இராகு தசா


வணக்கம்!
         ஒருவருக்கு இராகு தசா நடைபெறும் காலத்தில் அந்த வீட்டிற்க்கும் அவரின் உறவினர்களின் வீட்டிலும் இறப்பு நிகழ்வுகள் அடிக்கடி நடந்துக்கொண்டே இருக்கும். இது அனைவருக்கும் பொதுவான ஒரு பலனாகவே இதனை எடுத்துக்கொள்ளலாம்.

இறப்பு நிகழ்வுகள் மற்றும் அடிக்கடி மருத்துவமனை செல்லும் நிகழ்வுகள் எல்லாம் நடப்பது இராகு தசாவில் அதிகமாகவே இது இருக்கின்றது. பலரின் வாழ்வில் மிக நுட்பமாக கவனித்து உங்களுக்கு இதனை சொல்லுகிறேன்.

சோதிடத்தை நுட்பமாக பார்க்கும் சோதிடர்கள் இராகு தசா வந்தால் வாதம் வந்து கஷ்டப்படுவார்கள் என்று சொல்லுவார்கள். வாதம் வந்து மரணத்தை தரக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவதில் இராகு தசா ஒருவருக்கு அதிகமாக கொடுக்கின்றது என்பார்கள்.

வாதம் என்பது காற்றை குறிக்கும் ஒரு காரணி. மின்னல் நாெடியில் மரணத்தை தருவது எல்லாம் இராகு கிரகத்தால் தான் முடியும். இராகு தசா நடப்பவர்களுக்கு நிறைய விபத்துக்களால் கூட மரணம் நடக்கின்றது. எப்படி நடந்தது ஏன் நடந்தது என்று தெரியாமல் நடக்கும் மரணத்தை எல்லாம் இராகுவால் தான் நடத்த முடியும்.

உங்களின் ஜாதகத்தில் இராகு எப்படி அமர்ந்து இருக்கின்றது என்பதையும் கவனிக்கவேண்டும். இராகு அமர்ந்த நட்சத்திரம் மற்றும் இராசியை அடிப்படையாக கொண்டு செயல்படுவதால் அதற்கு தகுந்தமாதிரி பலனை கொடுக்கும்.

நாம் எதார்த்தமாக இருந்துக்கொண்டு இராகு கேதுவை எல்லாம் கொஞ்சம் கவனிப்பதோடு விட்டுவிடுகிறோம். நன்றாக அதனை அலசி ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் செய்யவேண்டும். கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டால் கண்டிப்பாக இதனை எல்லாம் தவிர்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: