Followers

Sunday, September 16, 2018

நவஅம்மன் யாகம் ஆரம்பம்


வணக்கம்!
          இன்று நவ அம்மன் (சண்டி) யாகம் ஆரம்பித்துவிட்டேன். காலையில் நவஅம்மன் யாகம் முதல்நாள் யாகத்தை முடித்துவிட்டு இந்த பதிவை தருகிறேன். 

நவ அம்மன் யாகம் இலவசமாக தான் செய்யப்படுகின்றது. எப்பொழுதும் இலவசமாக ஒரு நிகழ்வை நான் நடத்தினால் அதில் எனக்கு நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் எனக்கு வரும். நவஅம்மன் யாகத்திற்க்கு தங்களின் விபரங்களைப்பற்றி அனுப்புங்கள் என்று சொன்ன நாளில் இருந்து எனக்கு பிரச்சினை ஆரம்பம் ஆனது.

இலவசமாக செய்யும்பொழுது அவர்கள் தர்மம் செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். இதுவரை தர்மம் செய்யாதவர்களும் இருக்க தான் செய்கின்றனர். தர்மம் செய்யாதவர்கள் உடனே தர்மத்தை செய்துவிடுங்கள். கண்டிப்பாக நீங்கள் தர்மம் செய்துவிடவேண்டும்.

இலவசமாக அனுப்பியவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நிறைய கர்மாக்களை சுமந்துக்கொண்டு நீங்கள் இருக்கின்றீர்கள். உடனே அதனை கலைய முனையுங்கள். நிறைய கோவில்கள் செல்லுங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு வாருங்கள்.

தினமும் காயத்திரி மந்திரத்தை சொல்லிவாருங்கள். உங்களின் இஷ்டதெய்வத்தின் மந்திரத்தை கூட தினமும் பூஜையில் சொல்லிவந்தால் அதுவே பல புண்ணியங்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: