Followers

Monday, September 10, 2018

நம்பிக்கையோடு சோதிடம்


வணக்கம்!
          நிறைய பேர்கள் சொல்லும் ஒரு வார்த்தை எல்லாம் தன்னமிக்கை இருந்தால் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒரு பிரச்சினை வந்தாலும் சோதிடர்களிடம் சென்று கேட்ககூடாது என்பார்கள்.

ஒரு பிரச்சினை வந்தால் பரவாயில்லை. ஒரு பிரச்சினை பல பிரச்சினைக்கு வழி வகுத்துவிடும் என்பதால் தான் மக்கள் சோதிடர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்கின்றார்கள். என்ன தான் நம்பிக்கை எல்லாம் தன்மேல் வைத்தாலும் விதி அடிக்க ஆரம்பித்தால் அதில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

ஒரு சில கிரகங்கள் வாழ்வில் நிறைய சிக்கல்களை சந்திக்க வைத்துவிடும். திடீர் என்று பிரச்சினை வந்து அதனால் வேலையை இழந்தவர்களும் இருக்கின்றனர். வேலை இழந்து அதனால் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிப்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர். திடீர் மரணத்தை சந்திப்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

இன்றைய காலத்தில் அனைவருக்கும் சோதிடத்தைப்பற்றி தெரியும். கிரகங்கள் எப்படி தயாராகி அது அடித்து காலி செய்யும் என்பதும் தெரியும். இதனை தெரிந்துக்கொண்டு ஒரளவு அதற்கு தயாராகிவிடுவதற்க்கு தான் அனைவரும் சோதிடத்தை பார்க்கின்றார்கள்.

தன்னம்பிக்கையோடு சேர்ந்து ஆன்மீகத்தையும் நாடும்பொழுது எளிதில் ஒரு பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்பதற்க்காக தான் இதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: