Followers

Monday, September 3, 2018

தீயகிரகத்தின் தசா


வணக்கம்!
         ஒவ்வொரு தீயகிரகத்தின் தசாவிலும் ஒருவர் அதிகமான துன்பங்களுக்கு ஆளாகுவார். என்னிடம் சோதிடம் பார்க்கும் வாடிக்கைளார்களுக்கு தீயகிரகத்தின் தசா என்று தெரிந்தால் அவர்களுக்கு பரிகாரம் பரிந்துரை செய்துவிடுவது உண்டு.

ஜாதகம் பார்க்கும் நபர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு எளிமையான  வழியில் செய்யும் படி ஒரு பரிகாரம் பரிந்துரை செய்வது உண்டு. முக்கால்வாசி பேர் பரிகாரம் செய்யமாட்டார்கள். பரிகாரம் சொல்லவேண்டியது நமது கடமை என்று சொல்லிவிடுவேன் ஆனால் அவர்கள் செய்வதில்லை.

பல தீயகிரகத்தின் தசாவில் அடிப்பட்டு நான் வந்த காரணத்தால் நாம் சொல்லிவிடுவோம் ஆனால் அதனை செய்வதற்க்கு அவர்களின் கர்மா இடம் தருவதில்லை என்று சொல்லவேண்டும். கர்மா அவர்களை போட்டு தாக்கிவிடுகின்றது.

ஒரு தீயகிரகத்தின் தசாவில் ஒருவர் நன்றாக மாட்டிவிட்டால் அவரை போட்டு சின்னாபின்னாமாக செய்துவிடும். தீயகிரகம் அவர்களின் குடும்பத்தையே சிதைத்து விட்டுவிடும். பலருக்கு எதனால் இது நடக்கின்றது என்ற சிந்தனை கூட வருவதில்லை. சிந்தனை அந்த கிரகங்கள் கொடுப்பதில்லை என்பதால் அவர்களுக்கு தோன்றவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொருவரும் வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையாவது உங்களின் ஜாதகத்தை எடுத்து கிரகங்கள் எப்படி செல்கின்றன என்பதை கொஞ்சம் கவனித்து பாருங்கள். ஒரு நாளை ஒதுக்கியாவது அந்த ஜாதகத்தில் என்ன இருக்கின்றது என்பதை பார்த்துவிட்டால் போதும். நீங்களாவே அதற்கு வழிகளை கண்டறிந்து செயல்பட்டுவிடலாம்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறவிருக்கின்றது. காணிக்கை செலுத்துபவர்கள் விரைவாக செலுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: