Followers

Tuesday, September 18, 2018

ஏழுக்கு வரும் கிரகங்கள்


வணக்கம்!
          ஒருவருக்கு ஏழில் வரும் கிரகங்கள் அதிகளவில் தொந்தரவை ஒருவருக்கு தரும். ஏழில் வரும் தீயகிரகங்கள் ஒருவருக்கு கண்டத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. உங்களின் இராசிக்கு ஏழில் தீயகிரகங்கள் கோச்சாரபடி வரும் நேரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

ஒருவருக்கு கோச்சாரபடி ஏழில் கிரகங்கள் வரும்பொழுது உயிர்க்கு பங்கம் வருமா என்று கேட்டால் கண்டிப்பாக வருவதற்க்கு அதிகபட்சமான காரணங்கள் இருக்கின்றன. ஏழில் தீயகிரகங்கள் வரும்பொழுது அவர்க்கு மரணம் கூட ஏற்படும்.

ஏழில் சுபகிரகங்கள் வந்தால் அவர்க்கு திருமணம் அல்லது நல்ல தொழில் செய்யும் கூட்டாளிகள் அமைவார்கள். அது அவர்களின் ஜாதகத்தை பொறுத்து அமையகூடிய ஒன்றாக இருக்கும். சுபகிரகங்கள் வந்தால் நல்லது என்றும் தீயகிரகங்கள் வந்தால் தீமை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏழில் அமர்ந்த கிரகங்கள் தசா நடத்தும்பொழுது அவர்க்கு அடுத்தவர்கள் அல்லது துணையின் வழியாக நிறைய நல்லதும் நடக்கின்றது. தீயகிரகங்களின் தசாவில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால் போதுமானது.

நவ அம்மன் யாகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதுவரை தங்களைப்பற்றி விபரங்கள் தெரிவித்து அவர்களுக்கு யாகபடங்கள் வரவில்லை என்றால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். நவஅம்மன் யாகத்தில் தர்மம் செய்ய சொல்லிருந்தேன் பலர் இதுவரை செய்யவில்லை உடனே அதனை நிறைவேற்றுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: