Followers

Wednesday, September 12, 2018

விநாயகர் சதுர்த்தி


வணக்கம்!
          நேற்று திருப்பூர் சென்று இன்று காலை தஞ்சாவூர் வந்தேன். பதிவை கொடுப்பதற்க்கு தாமதம் ஆகிவிட்டது. பலர் நவஅம்மன் சண்டி யாகத்திற்க்கு தங்களின் பெயர்களையும் மற்றும் நட்சத்திரத்தையும் தெரிவித்து வருகின்றனர். அனைவரும் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

என்னிடம் அறிமுகமான நண்பர்களாக இருந்தால் அவர்கள் தங்களின் பெயரை இணைத்துவிடுங்கள் என்று சொன்னாலே போதுமானது. ஒரு நபரை நான் பார்த்துவிட்டால் அவரை மனதில் நிறுத்தி அனைத்து காரியத்தையும் நாம் செய்துவிடலாம்.

அறிமுகம் இல்லை என்றால் மட்டுமே நட்சத்திரம் மற்றைய விபரங்கள் எல்லாம் கேட்கவேண்டும். முடிந்தவரை என்னை இதுவரை சந்திக்காத நபர்கள் அனைவரும் சந்தித்துவிடுவது நல்லது. இது பலவிதத்திலும் உங்களுக்கு நல்லதை செய்யும் என்பதால் சொல்லுகிறேன்.

விநாயகர் சதுர்த்தி வருகின்றது. இந்த விநாயகர் சதுர்த்தி நல்லது என்றாலும் தற்பொழுது எல்லாம் இது அடுத்தவரை வம்பு இழுப்பதற்ககாக உள்ள பண்டிகை போலவே இருக்கின்றது. பல இடங்களில் நான் இதனை பார்த்து இருக்கிறேன்.

விநாயகரை வணங்கி நமது மூலாதாரத்தை திறந்து நமது தடைகளை எல்லாம் போக்கிக்கொள்வதற்க்கு வழி வகுத்துக்கொள்ளவேண்டும். நமது முன்னேற்றத்திற்க்கு உள்ளதற்க்காகவே அனைத்து வழிபாடுகளையும் செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: