Followers

Monday, September 17, 2018

தடையை உடைக்கும் ஆன்மீகசெயல்


வணக்கம்!
          நாம் எடுக்கும் காரியங்கள் எல்லாம் தடை இன்றி நடக்கவேண்டும் என்றால் அதற்கு பாக்கியஸ்தானம் மிகவும் வலுவாக அமையவேண்டும். பாக்கியஸ்தானம் முட்டுக்கட்டை போட்டால் நம்மால் எதுவும் நகர்த்தமுடியாது.

பாக்கியஸ்தானம் எந்த நேரத்திலும் தங்கு தடையின்றி தன்னுடைய வேலையை செய்யும்பொழுது தான் ஒருவர் மிகப்பெரிய அளவில் தன்னுடைய காரியத்தை அனைத்தையும் சாதித்து வெற்றி பெற்றுவிடுகிறார்.

உங்களுக்கு ஆன்மீக வழியில் நடக்கும் அனைத்து விசயங்களும் உங்களின் பாக்கியஸ்தானத்திற்க்கு வலுக்கொடுக்கும். இதனை அறிந்து தான் மக்கள் அனைத்து கோவிலுக்கும் நல்ல முறையில் செய்கின்றனர்.

இயற்கையில் ஜாதக அமைப்பில் பாக்கியஸ்தானம் சரியில்லை என்று நினைப்பவர்ளுக்கு எல்லாம் நிறைய கோவில்கள் மற்றும் தர்மகாரியங்களை செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள். இன்றைய காலத்தில் பல சாமியார்களுக்கு நல்ல வருமானம் கூட இப்படிப்பட்ட காரியங்கள் வெற்றி பெறுவற்க்கு தான் கொடுக்கின்றனர்.

உங்களுக்கும் காரியங்கள் தடை என்று வந்தால் நீங்களும் இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கி வேலை செய்யுங்கள். நிறைய சம்பாதிக்க வேண்டும் நினைப்பவர்கள் அனைவரும் செய்யவேண்டியது பாக்கியஸ்தானத்திற்க்கு வலு சேர்க்கும் வேலையில் இறங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: