Followers

Tuesday, October 15, 2013

சோதிடமும் ஆன்மீகமும் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    தொழில் செய்வதற்க்கு உதவி வருகிறேன் என்பதை உங்களுக்கு தெரியும். இதில் என்ன நடந்தது என்பதைப்பற்றி சொல்லவேண்டும். கடவுளின் விளையாட்டுப்பற்றி தெரிந்துக்கொள்ள நல்ல வாய்ப்பு இது.

இதற்கு பல பேர் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட ராசியினர் அதிகமாக வருகின்றனர். என்னடா இவர்கள் மட்டும் இத்தனை பேர் வருகின்றனர் பார்த்தால் ஒரு விசயம் புரிந்தது. அந்த ராசி செவ்வாய் வீட்டைக்கொண்ட மேஷ ராசி மற்றும் விருச்சிகராசிகாரர்கள் தான்.  இவர்கள் ஏன் என்னை தேடி வருகின்றனர் என்று பார்த்தபொழுது ஒன்று தெரிந்தது. இந்த ராசியினர் சனியின் தாக்குதலில் இருந்து வருகின்றனர். இவர்களின் ராசி அதிபதி செவ்வாய் இவர்களை காப்பாற்ற சனியின் ராசியை கொண்ட என்னிடம் அனுப்புகிறது என்பது தெரிகிறது.

இவர்கள் 90 சதவீதம் பேர் இப்பொழுது என்னிடம் இருக்கின்றனர். சரி நம்மால் முடிந்ததை செய்துகொடுத்துக்கலாம் என்று செய்துகொடுத்துக்கொண்டிருக்கிறேன். என்ன செவ்வாய் ராசி என்பதால் சண்டை ஏதும் போட்டு கொண்டு சென்றால் கதி அவ்வளவு தான். ஏன் என்றால் சனியின் ராசியிடம் பிரச்சினை என்று வந்துவிட்டால் சம்பந்தப்பட்ட நபரை அழிக்காமல் விடாது. பகையாளியிடமே வந்து தஞ்சம் அடைந்துவிட்டு பகையாளியை எதிர்த்தால் என்ன நடக்கும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சனியனாக மாறும்.

மீனராசி மற்றும் மேஷ ராசியினர் இப்பொழுது மிகப்பெரிய சிக்கலில் இருக்கின்றனர். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் மீனத்திற்க்கு அஷ்டமசனி மேஷத்திற்க்கு கண்டசனி. இன்னும் கூடுதலாக ராகு வேறு கூட்டணி. சரி இதனால் என்ன பெரிய பிரச்சினை வந்துவிடபோகிறது இருக்கவே இருக்கிறார் காலபைரவர் அவரிடம் ஒரு மனுவை போட்டுவிடலாம் என்று சென்றால் அங்கு தான் மிகப்பெரிய பிரச்சினை வரும். 

இந்த இரண்டு ராசி மட்டும் இல்லை அதிகப்பட்சம் குருவின் பார்வை நல்ல பலன் இல்லாமல் இருக்கும் ராசியினரை இப்பொழுது முடக்கவேண்டும் என்றால் முடக்கிவிடலாம். இதில் அதிகபட்சம் முடக்ககூடிய ராசி மீனம் மற்றும் மேஷம். உங்களுக்கு எதிரி யாராவது இருந்தால் அவர்கள் ஏதாவது ஒரு தெய்வத்திடம் போய் வேண்டினாலே நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். உங்களின் வாழ்வு கீழ்நோக்கி போய்விடும்.

அதாவது மாந்தீரிகத்தில் ஒரு வேலை இருக்கின்றது அதாவது ஒரு குடும்பம் அல்லது நபரை முடக்கிவிடுவார்கள். அவர்களை எந்தவிதத்திலும் முன்னேற விடாமல் மடக்கிவிடுவது. இதனை செய்வதற்க்கு அவர்கள் காலத்தை அந்தளவுக்கு துல்லியமாக கணித்து வைத்திருப்பார்கள். இந்த காலம் என்பது இப்பொழுது மீனராசிக்கும் மற்றும் மேஷராசிக்கும் அதிகமாக தாக்ககூடிய அபாயம் இருக்கின்றது. 

அவர்கள் இதற்கு தீயகட்டு என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள். கட்டு போட்டுவிட்டால் நீங்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும் உங்களுக்கு முன்னேற்றம் என்பது துளியும் இல்லாமல் போய்விடும். ஒரு சிலருக்கு வியாபாரம் நடக்ககூடாது என்று கட்டுபோடுவார்கள். ஒரு சிலருக்கு குடும்பம் நன்றாக இருக்ககூடாது என்று கட்டுபோடுவார்கள். இப்படி பல கட்டுகள் இருக்கின்றன.

அடுத்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: