Followers

Saturday, October 26, 2013

நம்பினால் நம்புங்கள்


ணக்கம் ண்பர்களே!
                    இன்று சனிக்கிழமை பல நண்பர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செலுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சனிக்கிழமை சனிக்கிரகத்தைப்பற்றி ஒரு செய்தியுடன் இன்றைய பதிவினை தொடங்கலாம்.

எங்களிடம் பரிகாரம் செய்ய சொல்லி ஒரு சிலர் பணத்தை கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு என்று நாங்கள் பரிகாரம் செய்துக்கொடுப்பது உண்டு. சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் பரிகாரம் செய்யும் இடத்திற்க்கு அழைத்துக்கொண்டு செல்வதில்லை. நாங்களே செய்து விடுவோம். அப்படி சனிக்கிரகத்திற்க்கு என்று பரிகாரம் செய்யும்பொழுது சனிக்கிரகத்திற்க்கு எதிராக இறங்கி பரிகாரம் செய்வோம்.

அவருக்கு என்ன என்ன விருப்பமாக இருக்குமோ அதற்கு எதிராக நாங்கள் கொடுத்து பரிகாரம் செய்து விடுவது உண்டு. அப்படி எதிராக பரிகாரம் செய்யும்பொழுது சனியின் மைந்தன் என்று வர்ணிப்பவரான மாந்தியை வைத்து செய்வதும் உண்டு. அது சனிக்கு எதிராக தான் அதிகப்பட்சம் நடக்கும். அப்படி செய்யும்பொழுது சனியின் பாதிப்பு குறைந்துவிடும்

என்ன செய்யும்பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செய்வது உண்டு. கொஞ்சம் தவறினாலும் சனிபகவான் நமக்கு பிரச்சினையை கொடுப்பார். அதாவது செய்கின்ற எங்களுக்கு பிரச்சினையை கொடுப்பார்.அதிகப்பட்சம் சூரியனை வைத்து செய்துவிடுவதும் உண்டு.

அனைத்தும் குரு எனக்கு கற்றுக்கொடுத்தது. இது எல்லாம் செய்வது என்பது அதிகம் செலவு ஆகும். என்னிடம் வரும் தொழில் உதவி பெறுபவர்களுக்கு மட்டும் நானே செய்துவிடுவது உண்டு.அப்பொழுது மட்டுமே அவர்களால் நிற்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: