Followers

Saturday, October 26, 2013

முன்னுரிமை


வணக்கம் நண்பர்களே!
                    நான் கற்ற அனைத்து விசயங்களையும் அதன் பயனாளிகளாக முதலில் இருப்பது ஜாதககதம்பம் வழியாக வரும் நபர்களையே தான் முதலில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.

ஜாதககதம்பம் வழியாக அது நடைபெறும்பொழுது ஒரு பதிவை நாம் படித்தோம் அந்த பதிவு வழியாக நாம் நல்ல பயனைபெற்றோம் என்று இருக்கவேண்டும் என்பதற்க்காக உங்களுக்கு  இதனை நான் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

தொழில்களுக்கு உதவது கூட அந்த எண்ணத்தில் மட்டுமே. தொழில் உதவுவது வேண்டாம் என்று நினைத்திருந்தேன். நமது நேரிடையான வாடிக்கையாளர் மட்டும் போதும் என்று இருந்தேன். சரி இதன் வழியாக நல்லவர்களும் வந்து பயனடைவார்கள் என்று அந்த அறிவிப்பையம் தந்தேன். இன்று நல்ல நண்பர்கள் அதன் வழியாகவும் வருகின்றனர். அவர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

காயத்ரி மந்திரத்தை தவிர வேறு எந்த ஆன்மீகப்பயிற்சியும் தற்பொழுது தருவதற்க்கு வாய்ப்பில்லை என்பதால் வேறு எதுவும் தரவில்லை. வரும் காலங்களில் பார்க்கலாம்.

எப்படி எல்லாம் வரும் நண்பர்களுக்கு உதவி செய்யலாம் என்று பல விதத்திலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களுக்கு கண்டிப்பாக ஜாதககதம்பம் ஒரு நல்லவழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

ஒரு சில நண்பர்கள் ஏதோ ஒரு பெயரை சொல்லி அந்த பயிற்சியை கற்றுதருவீர்களா என கேட்பார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்வது யாரையும் நான் சொல்லுவதில்லை. பயிற்சி என்று வைத்தால் ஜாதககதம்பத்தில் முதலில் வெளிவரும்.தேவையில்லாமல் கேட்காதீர்கள்.

தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு பெரிய எதிர்காலத்தை ஜாதககதம்பம் அமைத்துக்கொடுக்கும். அம்மனின் அருளை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: