Followers

Wednesday, October 9, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 47


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் சூரியபுத்தியை கடந்த தொடரில் பார்த்தோம். இந்த பதிவில் சூரியன் கெட்டு புத்தி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது என்ன பலனை கொடுப்பார் என்று பார்க்கலாம்.

உடல் முழுவதும் கட்டி வந்துவிடும். உஷ்ணகட்டி வந்து பிரச்சினை கொடுக்கும். அரசாங்கத்தால் பயம் ஏற்படும். ராகு தசாவே கடத்தல் வேலைக்கு காரகம் வகிப்பவர் அந்த வழியில் கூட உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு மாட்டிக்கொள்வீர்கள். ஒரு சிலருக்கு எப்பொழுதோ செய்த தவறுக்கு இப்பொழுது தண்டனையை கொடுத்துவிடுவார்.

நீங்கள் பயணம் செய்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த பயணத்தின் போது பிரச்சினை ஏற்பட்டு அதனால் காவல்நிலையத்திற்க்கு செல்ல நேரிடும். ஒரு சிலருக்கு கையில் இருக்கும் பணம் அல்லது நகை காணாமல் போய்விட வாய்ப்பு உண்டு அதற்க்காகவும் காவல்நிலையம் செல்ல வைத்துவிடுவார். திருடர்கள் வழியாக பயத்தை ஏற்படுத்திவிடுவார்.

உங்களின் தந்தை வழி உறவினர்கள் மரண செய்தி உங்களை தேடிவரும். அந்த மரணச்செய்தியால் உங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்திக்கொடுப்பார். தந்தை வழியில் உள்ள உறவினர்களில் யார் மேல் அதிகம் பாசம் வைத்து இருக்கின்றீர்களோ அவரை கொன்றுவிடுவார்.

நீங்கள் முயற்சித்த காரியத்தில் தோல்வியை தழுவசெய்வார். ஒரு சிலர் அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதி இருப்பார். அந்த தேர்வு தோல்வியை தந்துவிடும்.

எதிரிகளின் தொந்தரவுக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக தந்தை வழி உறவினர்கள் எதிரியாக மாறுவதற்க்கு வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் சூரியபுத்தி கெடுதலை அதிகம் தரும் என்று சொல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: