Followers

Wednesday, October 2, 2013

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                    ஆண்டவனின் படைப்பில் அனைத்துமே மாறக்கூடியதாக இருக்கின்றது. இந்த மாற்றங்கள் மட்டும் இல்லாமல் செய்துவிடமுடியுமானால் நாம் ஏழரை சனி அஷ்டமனி போன்றவற்றை பார்த்து பயப்பட தேவையில்லை. நம் கையில் எதுவும் இல்லை என்று ஆகிவிட்டது. நாம் காலத்தின் பிடியில் இருக்கும் வரை அதன் பிடியில் இருந்து தப்பமுடியாது. நம்மால் தப்பமுடியும் என்று நினைத்தால் அவன் மனிதனில் இருந்து வேறுபட்டவன் ஆகின்றான்.

எல்லாம் காலத்தால் தான் நடைபெறுகின்றது என்று சொல்லிக்கொண்டு நாம் இருந்தால் மனிதனின் பிறப்பு வீணாகிவிடும். நம்மாலும் எதையாவது செய்யவேண்டும் அப்படி செய்வது தான் பரிகாரம். இந்த பரிகாரம் முழுமையாக திருப்தியை தரமுடியவில்லை என்றாலும் ஒரளவு பக்குவபடுத்திக்கொள்ள செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஏன் என்றால் நாம் நன்றாக இருந்தால் மட்டுமே நமது குடும்பம் நன்றாக இருக்கமுடியும்.

பொதுவாக சனியின் திருவிளையாடல் எதுவழியாக நடைபெறும் என்றால் நாம் முன்ஜென்மத்தில் செய்த தீவினைகளை பொறுத்து அமையும். இப்பொழுது இந்த ஜென்மத்தில்இப்பொழுது செய்கின்ற தீமைக்கும் இந்த பிறவியிலேயே அனுபவிக்க வைத்துவிடுகிறார். அவர் அவர்கள் பாஸ்ட் உலகம் இது என்று சொல்லுகிறார்கள். அனைத்தும் வேகத்தில் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். உணவகத்திற்க்கு சென்றாலும் பாஸ்ட் உணவுகளை விரும்பும்பொழுது கடவுள் மட்டும் ஸ்லோவாக தண்டனையை கொடுப்பாரா என்ன அவரும் நமது எண்ணத்திற்க்கு தகுந்தவாறு பாஸ்ட்டாக தண்டனையை இந்த ஜென்மத்தில் கொடுத்துவிடுகிறார்.

 முன்காலத்தில் ஒருவர் தவறு செய்தால் அவருக்கு பிறக்கும் குழந்தைகள் அந்த பாவத்தை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள் ஆனால் இன்று அப்படி இல்லை அவன் அவன் செய்த பாவத்தை அவனே தண்டனையை அனுபவிக்கிறான்.

இளம்வயதில் நாம் செய்த பாவங்களை பட்டியல் போட்டு நமக்கு வரும் ஏழரைசனி மற்றும் அஷ்டமசனியில் தாக்குதலை நடத்திவிடுகிறார் கடவுள். 

மேஷ ராசி மற்றும் விருச்சிக ராசியை லக்கினமாக மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு சனியின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுருந்தேன். ஒருவரும் சொல்லவில்லை. பரவாயில்லை. நானே என்னால் முடிந்த மற்றும் தெரிந்த பரிகாரத்தை சொல்லிவிடுகிறேன்.

அனைத்தும் பூர்வபுண்ணியத்தை சார்ந்து தான் இருக்கின்றது. பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியத்தையும் சேர்ந்து அனைத்தும் வருவதால் இந்த வீட்டை நீங்கள் பலப்படுத்தினால் உங்களுக்கு ஏழரைசனி, அஷ்டமசனி மற்றும் வேறு எந்த சனியாக இருந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம்.

உங்களின் ஜாதகத்தை பார்த்து ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது வீட்டு அதிபதியின் நிலை பார்த்து அதற்கு தக்க பரிகாரம் செய்யவேண்டும்.  ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பை சனிக்கிழமையில் செய்யவேண்டும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிப்பட்டு வரவேண்டும். எந்த ஒரு தானத்தையும் வறுமைகோட்டிற்க்குள் கீழ் இருக்கும் மக்களுக்கு செய்யவேண்டும். 

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 4-10-2013 வெள்ளிக்கிழமை அன்று என்னை சந்திக்கலாம். என்னை தொடர்புக்கொள்ள 9551155800

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: