Followers

Sunday, October 6, 2013

திருப்பதி குடை


ணக்கம் ண்பர்களே!
                    அடிக்கடி பயணம் சென்றதால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. இனி வரும் நாட்களில் உங்களின் தாகத்திற்க்கு நல்ல விருந்து படைக்கிறேன். 

நேற்று பெரம்பூர் சென்று இருந்தேன். அங்கு எதிர்பாராத விதமாக திருப்பதி குடை பவனி வந்தது. அதனை பார்ப்பதற்க்கு நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் சனிக்கிழமை என்பதால் மணலி சென்று அந்த பெருமாளை பார்க்கலாம் என்றால் பெருமாளே நான் இங்கே வந்துவிட்டது போல் நேராக வந்துவிட்டார். 

அற்புதமான தரிசனம். எல்லோரும் ஆசைபடுவார்கள் அல்லவா ஸ்பார்க் அந்த ஸ்பார்க் பெருமாளை பார்க்கும்பொழுது வந்தது. இது அடிக்கடி நமக்கு நடக்கும் என்றாலும் ஒரு பெருமாளின் குடை வரும்பொழுது ஸ்பார்க் நடப்பது மிகப்பெரிய அதிசயம். அந்த பெருமாளே வருகிறார். அதற்க்கு தான் அவ்வளவு கூட்டம் அங்கு. தரிசனம் செய்துவிட்டு மணலி செல்லவேண்டும் என்பதால் நேராக மணலி சென்று கரிகிருஷ்ண பெருமாளை பார்த்துவிட்டேன்.

நீங்களும் ஆன்மீகத்தில் இருக்கும்பொழுது உங்களை தேடி அனைத்து தெய்வங்களின் தரிசனமும் கிடைத்துவிடும். நீங்கள் ஒரு தெய்வத்தை மட்டுமே எடுப்பீர்கள் ஆனால் அனைத்து தெய்வங்களும் உங்களை தேடி வரும். எதிர்பாராதவிதமாக அனைத்து தெய்வங்களின் தரிசனமும் கிடைத்துவிடும்.இது ஒன்றே போதும்.

நான் பயிற்சி எடுக்கும்பொழுது அம்மனை மட்டுமே எடுக்கபோகிறோம் வேறு எதும் நமக்கு கிடைக்காது என்று நினைத்து இருந்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது அனைத்தும் நம்வசம் தேடிவரும் என்று அப்பொழுது தெரியாது.இப்பொழுது நமக்கு தெரிகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: