Followers

Monday, October 21, 2013

கலைதுறையில் சாதிப்பதற்க்கு


வணக்கம் நண்பர்களே !
                    இப்பொழுது சினிமா துறையில் இருப்பவர்கள் அதிகம் பேர் வருகின்றனர். அவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சுக்கிரன் பாதிப்பால் அவர்களின் தொழில் பாதிக்கப்படுவதற்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே அவர்களின் தொழில் எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.சுக்கிரனுக்கு எந்தவித கெடுதல் கிரகங்களின் தொடர்பும் இருக்ககூடாது. அப்படி கெடுதல் கிரகங்கனின் தொடர்பு கிடைத்தால் இவர்கள் கலைதுறைக்கு சென்று அங்கு சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதுவே மிகப்பெரிய பிரச்சினையாகிவிடும்.

கலைதுறையினர்  வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது அம்மன் கோவிலை வணங்கிவரவேண்டும். அம்மன் கோவில் என்றால் அனைத்து அம்மன் கோவிலுக்கும் செல்லகூடாது. பிராமணர்கள் கொண்டு பூஜை செய்யபடாத அம்மனை வணங்கிவாருங்கள். 

பல பேர்க்கு அப்படிப்பட்ட அம்மன் கிடைக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். நமது அம்மனும் பிராமணர்கள் கொண்டு பூஜை செய்யப்படாத ஒரு அம்மன் தான் நீங்கள் நமது அம்மனையே வணங்கிவருவது நல்லதாக இருக்கும்.

மேலே இருக்கும் போட்டோவை பார்த்து வணங்கி வருவது நல்லது. கலைதுறையினர் வெற்றி பெறமுடியும். உங்களின் வேண்டுதலை கூட இந்த போட்டோவை பார்த்து வையுங்கள். அம்மன் நடத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: