Followers

Friday, October 25, 2013

வணக்கம் சென்னை


வணக்கம் நண்பர்களே!
                    சென்னை வந்து சேர்ந்தாச்சு. இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்க்கொண்டதால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை.சுற்றுப்பயணம் மேற்க்கொண்டாலும் பதிவிற்க்கு வருபவர்களுக்கு இன்று ஒன்றும் தரவில்லையே என்று மனது நினைக்கிறது. முயற்சி செய்து பார்க்கிறேன். வேலை அதிகம் இருப்பதால் எழுதமுடியவில்லை.

நான் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்பொழுதும் அந்தந்த பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை வந்து சந்தித்து பேசுகிறார்கள். அவர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

எழுத்து வழியாகவே தொடர்புக்கொண்டவர்களை நேரில் சந்திக்கும்பொழுது ஒரு வித மகிழ்ச்சியான விசயத்தை அளிக்கிறது. நிறைய நண்பர்கள் நம்மை வந்து சந்திக்கும்பொழுது இவ்வளவு பேர் நமது பதிவை படிக்கிறார்களா என்று கூட வியப்பாக இருக்கின்றது. நான் இன்னமும் நிறைய தகவலை உங்களுக்கு தரவேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது கொடுத்த தகவல் எல்லாம் குறைவாக தான் இருக்கின்றது. நிறைய தகவலை தரும்பொழுது உ்ங்களுக்கு இன்னமும் மனநிறைவை அளிக்கமுடியும். வியாபாரத்திற்க்கு உதவும் வகையில் அதிகமான நண்பர்கள் இப்பொழுது வருகின்றனர். 

ஒரு சில கம்பெனி நஷ்டம் ஏற்பட்டபின்பு வருகின்றனர். நஷ்டம் ஏற்பட்ட கம்பெனியை தூக்கி நிறுத்துவதற்க்கு கொஞ்ச காலம் ஏற்படும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும். நஷ்டம் ஏற்படும் கம்பெனி வருவது தப்பில்லை. நஷ்டம் ஏற்பட்டபின்பு வந்தால் பணம் அதிகம் கேட்பேன். 

உங்களின் கம்பெனி நன்றாக சென்றுக்கொண்டு இருந்தால் நீங்கள் தான் உஷாராக இருக்கவேண்டும். நஷ்டம் கம்பெனிக்கு ஏற்பட்டுவிடகூடாது என்று கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும்.

இப்பொழுது தான் புதிதாக கம்பெனி துவக்கபோகிறேன் என்றாலும் வாருங்கள்.நமது உதவி உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். ஒவ்வொரு நாளும் தெய்வஅருளோடு செயல்படும்பொழுது உங்களின் வியாபாரம் பன்மடங்கு உயரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment: