Followers

Tuesday, October 22, 2013

ஆன்மீக அனுபவங்கள் 126


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று ஒரு இதழை படித்தேன் அதில் ஒரு நடிகை ஆன்மீகத்திற்க்காக தேடி அலைந்து கடைசியில் ஒன்றும் வேண்டாம் என்று  சொந்த வீட்டிற்க்கு திரும்பிருந்தார். அவர் பெயரை மறந்துவிட்டேன்.

அவர் சொன்னது இது தான் அனைத்து இடத்திலும் தேடி ஒன்றும் கிடைக்கவில்லை யாரும் எனக்கு தரவில்லை என்று தான் சொல்லிருந்தார். மடங்களுக்கு சென்று காய்கறி வெட்டுவது தோட்ட வேலை செய்வது இது தான் அங்கு நடந்துக்கொண்டு இருக்கிறது வேறு எதுவும் அங்கு இல்லை. பதினைந்து வருடங்களுக்கு மேலாக அங்குள்ளவர்கள் இதனை மட்டும் தான் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.அங்கு காய்கறி வெட்டுவதற்க்கு வீட்டிலேயே காய்கறி வெட்டிக்கொண்டு ஆன்மீகத்தை தேடலாம் என்று சொல்லிருந்தார்.

உண்மையான செய்தி தான் அது. தியானகூடங்களில் மற்றும் ஆன்மீகவகுப்புகளில் நடைபெறும் கூத்து இது தான். ஒரு சாமியார் அதிகப்பட்சம் 18 பேர்க்கு மேல் தீட்சை கொடுக்கமுடியாது என்று நான் பழைய பதிவிலேயே சொல்லிருக்கிறேன்.

இப்ப உள்ள மடங்களில் எல்லாம் லட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் எதுவும் நடந்து இருக்காது. சும்மா கூட்டத்தை கூட்டுகிறார்கள்.    நீங்கள் ஆன்மீகத்திற்க்கு என்று சென்றால் தனிநபரை தேடித்தான் செல்லவேண்டும். நல்ல சக்தியோடு இருப்பவர்கள் வெளியில் தெரியமாட்டார்கள். அவர்களை நாடினால் ஸ்பார்க் கிடைக்கும். அதனை வைத்துக்கொண்டு நீங்கள் வீட்டில் இருந்தே அனைத்து பயிற்சியும் செய்துவிடமுடியும்.

மந்தையாக இருக்கும் இடத்திற்க்கு சென்றால் மனரீதியாக உங்களை வசியப்படுத்துதல் தவிர அங்கு ஒன்றும் நடைபெறாது. நான் ஒருவரிடம் பயிற்சி பெற்றேன். அவர் என்னை சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறார். என் விசயத்தில் எதிலும் தலையிடுவதில்லை. சுதந்திரமாக இருப்பது தான் ஆன்மீகம்.

எதுவும் பந்தப்படுத்தகூடாது. இதனை செய்யவேண்டும் அதனை செய்யவேண்டும் என்றால் கண்டிப்பாக அது ஆன்மீகமடம் கிடையாது. கம்பெனி நடத்திக்கொண்டு இருக்கின்றனர் என்று தான் அர்த்தம்.தனிநபர் சக்தியோடு இருப்பவர்களை தேடிச்சென்று கேட்டால் கிடைக்கும். அதன் பிறகு நீங்களே அனைத்தையும் பெற்றுவிடுவீர்கள்.

23,24-10-2013 புதன், வியாழன் அன்று திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில்  என்னை சந்திக்கலாம். 

தொடர்புக்கொள்ளவேண்டிய எண் 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: