Followers

Tuesday, October 15, 2013

சொந்த வீடு


வணக்கம் நண்பர்களே!
                    இன்று வரை பல பேர்களின் வீடுகளுக்கு சென்று வருகின்றேன். இப்படி பல வீடுகளுக்கு சென்று வருவதால் எனக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதர்களும் கூடுமானவரை ஒரு சொந்த வீடு கட்டுங்கள் அல்லது வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு சில வாடகை வீட்டில் அவர்களுக்கு தேவையானவற்றை பூஜை முறையில் செய்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. அதனால் நீங்கள் எப்படியும் ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.

வீடுகட்டும்பொழுது நான்கு புறமும் ஒரு ஆள் சுற்றி வருவது போல் இருந்தாலும் நல்லது. நாங்கள் அந்த வீட்டை சுற்றி பாதுகாப்பு அரண் போல் செய்துகொடுக்க வசதியாக இருக்கும். உனக்காக எங்களை இப்படி கட்ட சொல்லுகிறாயா என்று நினைக்க தோன்றும். உங்களின் வசதிக்காக தான் இப்படி சொல்லுகிறேன்.

நீங்கள் வீட்டை கட்டி வாடகைக்கு கொடுத்திருந்தால் அந்த வீட்டில் தங்கியிருக்கும் குடும்பத்திற்க்கு சுதந்திரமாக பூஜையை செய்ய அனுமதி அளியுங்கள்.தானும் வாழனும் பிறரையும் வாழவைக்கவேண்டும் என்று நினையுங்கள். உங்களை தேடி அனைத்தும் வந்துவிடும்.

உங்களுக்கு விருப்பமான வாழ்க்கை வாழவேண்டும் என்றால் முதலில் ஒரு வீட்டை தன்னுடையதாக மாற்ற வேண்டும் என்பதை நினையுங்கள். நீங்கள் வாழ்கின்ற வீடு உங்களின் வாழ்க்கையை உயர்த்த பல வழிகளில் உங்களுக்கு தெரியாமல் உதவுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: