Followers

Saturday, October 19, 2013

அம்மனின் கோவில்


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மனின் கோவிலைப்பற்றி பதிவில் சொன்னவுடன் அதிகமான பேர் நாங்கள் வருகிறோம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு நன்றி.

நீங்கள் வருவதற்க்கு ஒன்றும் தடை கிடையாது. உங்களுக்கு ஒன்று சொல்ல இந்த நேரத்தில் ஆசைப்படுகிறேன். நீங்கள் நன்றாக வாழ்ந்துக்கொண்டிருந்தால் நீங்கள் வரலாம். நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் நீங்கள் அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள். உங்களுக்கு அம்மன் உதவி செய்யும் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகு நீங்கள் அம்மனின் கோவிலுக்கு வரலாம். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நல்லது நடக்கட்டும் அதன் பிறகு வாருங்கள். இது ஒரு புதிய வழியை உங்களுக்கு சொல்லுகிறேன்.

ஆன்மீகம் என்றாலே எதையாவது சொல்லிக்கொண்டு கூட்டம் கூட்டுவதே வேலையாக இருக்கின்றார்கள். நமக்கு கூட்டம் கூட்டுவது எல்லாம் வேலை கிடையாது. நான் எந்த கோவிலும் அதிகம் பரிந்துரை செய்வது கிடையாது. ஒரு சில கோவில்கள் மட்டும் பரிந்துரை செய்திருக்கிறேன். அதுவும் நீங்களே போய் கும்பிட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதோடு சரி. 

அம்மனிடம் வேண்டுதலை வைத்து அது நிறைவேற்றிக்கொடுத்தவுடன் வரலாம். அந்த வேண்டுதலும் மிக நல்ல நிலைமைக்கு என்னை கொண்டுவா அதன் பிறகு உன் சந்நிதியில் அடி எடுத்து வைக்கிறேன் என்று வேண்டுங்கள். காலம் சென்றாலும் பரவாயில்லை. அது நடக்கும். நல்ல நிலைமையில் இருக்கும்பொழுது நீங்கள் வரலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: