Followers

Wednesday, October 30, 2013

காயத்ரி மந்திரப்பயிற்சி


ணக்கம் ண்பர்களே!
                    நமது ஜாதக கதம்பம் வழியாக ஆன்மீகத்தை கற்றும் தரும் ஒரு  பயிற்சி தான் காயத்ரி மந்திர பயிற்சி. காயத்ரி மந்திர பயிற்சியை வரும் 6.11.2013 அன்று முதல் தொடங்கலாம். தீபாவளி முடிந்த பிறகு வரும் நாளை பார்த்து சொல்லியுள்ளேன்.

அன்றைய தேதியில் இருந்து பெளர்ணமி முடிய நீங்கள் இந்த பயிற்சியை தொடங்கலாம். நாம் பிறந்து இது வரை ஒரு ஆன்மீகப்பயிற்சியையும் செய்யாமல் இருந்து வந்தால் நாம் பிறந்தர்க்கே அர்த்தம் இல்லை. இது ஒரு சிறிய பயிற்சி இதனையாவது நீங்கள் செய்யுங்கள்.

பல பேர் காயத்ரி மந்திர பயிற்சி என்றவுடன் பயந்துவிடுகிறார்கள். எதற்க்காக பயப்படுகிறார்கள் ஆன்மீகம் என்று போனால் இல்லறத்தில் இருந்துக்கொண்டு செய்யும்பொழுது பிரச்சினை வந்துவிடும் என்றும் நினைக்கிறார்கள். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தான் ஆன்மீகம் தேவைப்படும்.

எந்த ஒரு பயமும் தேவையில்லை. நீங்கள் எப்பொழுதும் இருப்பது போல் இருந்துக்கொள்ளலாம். என்ன ஒரு கூடுதல் பயன் என்றால் இறைச்சக்தி நம்மிடம் இருக்கும்பொழுது நமக்கு வரும் பிரச்சினையை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும் அவ்வளவு தான் வேறு ஒன்றும் கிடையாது.

விபரங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு பிடித்த மந்திரத்தை எடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான வழிமுறையை சொல்லிதருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: