Followers

Wednesday, October 9, 2013

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல பயணங்களை மேற்க்கொண்டபடியால் உங்களுக்கு பதிவுகளை நிறைய தருவதற்க்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நமது அம்மனும் நவராத்திரி வழிப்பாட்டில் ஈடுபாட்டோடு இருப்பதால் அதுவும் இந்த பக்கம் வரவில்லை என்று நினைக்கிறேன் ஆனால் இத்தனை ஆத்மாக்களையும் ஒரு பதிவாவது தந்து ஆத்மா திருப்தியை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது அதுவும் அம்மனின் செயல் மட்டுமே. 

சிவனை விட நமது இல்லத்திற்க்கு சக்தியின் துணை தான் அதிகம் வேண்டும் என்று அம்மன் வழிப்பாட்டை நமது மக்கள் நவராத்திரி வழியாக அம்மனுக்கு சிறப்பித்து வழிபட்டு வருகிறார்கள். எங்கள் பெண்கள் இருக்கின்றார்களோ அங்கு அம்மன் இருக்கின்றாள் என்று நமது முன்னோர்கள் சொல்லிவைத்து இருக்கின்றார்கள். 

நமது அம்மனின் செயல் அளவிடமுடியாத ஒன்று. இன்று பல பேர்களுக்கு அது நன்மை செய்துக்கொண்டு இருக்கின்றது. நமது தளம் வழியாக வருபவர்களுக்கு அதிகமான நன்மை கிடைக்கின்றது. அம்மன் இருக்கின்றது என்று நம்பிக்கையை வைத்து செயல்படும்பொழுது உங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும்.

நீங்கள் பிற வழிபாட்டை பின்பற்றி வரலாம் என்னை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் உஙகளின் குலதெய்வத்தை கும்பிடலாம். எந்த கோவிலுக்கும் சென்று வரலாம் ஆனால் பிறர் வழங்கும் எந்த மந்திர பயிற்சியும் செய்யகூடாது. அப்படி செய்பவர்கள் என்னிடம் வரும்பொழுது உங்களுக்கு அம்மன் வழியாக தொந்தரவை மட்டுமே நீங்கள் சந்திக்க வேண்டிவரும். 

பிரச்சினையில் இருந்து பிழைத்துக்கொள்ள தான் வருகின்றீர்கள் இங்கு வந்து பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். அடுத்ததாக என்னையும் தொடர்புக்கொண்டு உதவி கேட்பது பிறர் யாராவது வந்தாலும் அவர்களிடம் உதவி கேட்டு அனைத்து முறையையும் பின்பற்றும்பொழுது அம்மனின் கோபத்திற்க்கு ஆளாககூடும் என்பதால் இதனை தவிர்க்கவும். இப்படி வருபவர்களும் தயவு செய்து வராதீர்கள். 

அங்காளபரமேஸ்வரி என்பது பயங்கரமான உக்கிர தெய்வம் இதனை சாந்தப்படுத்த முடியாத ஒன்று. அது உங்களுக்கு எதிராக திரும்பிவிட்டால் உங்களை காப்பாற்றமுடியாது என்பதால் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன்.

இப்பொழுது பல பேர்களுக்கு நான் செய்யும்பொழுது ஒரு சிலருக்கு அம்மன் மறுப்பதற்க்கு காரணம் என்ன என்று பார்த்தால் இப்படி வருகின்றது அதனால் நண்பர்களே இப்படி வருபவர்கள் தயவு செய்து வராதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: