Followers

Wednesday, October 16, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 54


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவில் செவ்வாயின் புத்தியை பற்றி பார்த்து வருகிறோம். தொடர்ந்து பார்க்கலாம்.

செவ்வாய் கிரகம் நன்றாக அமர்ந்து அதன் புத்தி நடைபெற்றால் எப்படி பலன் தரும் என்பதை பார்த்து வருகிறோம் தொடர்ந்து பார்க்கலாம்.

செவ்வாய் ஏழாவது வீட்டில் இருந்தால் திருமணம் நடைபெறாமல் இருந்தால் உடனே திருமணம் நடைபெறும். இடம் விட்டு செல்லுதல் நடைபெறும் மனதிற்க்கு பிடித்த இடமாக அது இருக்கும். திருமணம் செய்யும்பொழுது அதிகளவு பணம் வரும். 

செய்கின்ற வேலையில் பதவி உயர்வு ஏற்படும். செய்தொழிலில் அதிகமான லாபம் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகள் வழியாக உங்களுக்கு லாபம் வரும். 

செவ்வாய் எட்டாவது வீட்டில் இருந்தால் துணைவருக்கு பணம் வரும். தனலாபம் ஏற்படும். உயில் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். சுபசெலவு ஏற்படும். அடிக்கடி  பயணங்கள் ஏற்படுத்தி வைப்பார்.

அடுத்த வீட்டுக்காரர் அதாவது பக்கத்துவீட்டுகாரர் வழியாக தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

செவ்வாய் ஒன்பதாவது வீட்டில் இருந்தால் பெரியோர்களின் உதவி கிடைக்கும். ஊரில் தலைமை பொறுப்பு தேடி வரும். புண்ணியஸ்தலம் சென்றுவருவீர்கள். கோவில்கட்டும் வாய்ப்பு ஏற்படும்.

புதியதாக வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை உங்களுக்கு கிடைக்கும். அந்த மனை உங்களின் தாத்தாவின் சொத்தாக இருக்ககூடும். தாய்வழி தாத்தாவாக கூட இருக்க வாய்ப்பு அதிகம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: