Followers

Thursday, October 17, 2013

உங்களுக்காக


வணக்கம் நண்பர்களே!
                    காயத்ரி மந்திர பயிற்சி என்று பதிவில் சொன்னவுடன் ஏதோ தனியாக வகுப்பு எடுப்பார்கள் என்று பல பேர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். பத்து நிமிடம் போன் செய்து இதனை தெரிந்துக்கொள்ளலாம். 

உங்களின் நேரத்தை எல்லாம் விரையமாக்க நான் நினைப்பது கிடையாது. நேரம் அவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என்பதை நான் அறிவேன். வகுப்பு எல்லாம் எடுப்பதற்க்கு நம்மிடமும் அந்தளவுக்கு ஒர்த்து இல்லை. காயத்ரி மந்திரப்பயிற்சிக்கு எல்லாம் அதிகமான நேரத்தை செலவு செய்யவேண்டியதில்லை. ஐந்து நிமிடம் செய்தாலே போதும். நாமும் ஆன்மீகவாதி லிஸ்டில் சேர்ந்துக்கொள்ளலாம். உடனே தொடர்புக்கொண்டு பயிற்சியை ஆரம்பித்துவிடுங்கள்.

என்னை சந்திப்பவர்கள் அவர்கள் என்னை பார்க்கும்பொழுதே தெரிகிறது. ஆன்மீகவாதி என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற கற்பனையில் வருகின்றனர் என நினைக்கிறேன். சாதாரணமாக தான் நான் இருப்பேன். நான் அடையாரில் இருப்பது ஒரு முஸ்லீம் நண்பரின் இடம். அவர்களின் கடவுளின் படம் தான் இங்கு இருக்கும்.

என்னிடம் பேசுபவர்கள் சார் உங்களை பார்க்கமுடியுமா என்று கேட்கிறார்கள். நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா. நீங்கள் போன் செய்தால் கண்டிப்பாக எந்த நேரத்திலும் என்னை வந்து சந்திக்கமுடியும். வருவதற்க்கு முன்பு போன் செய்துவிட்டு வாருங்கள் ஏன் என்றால் வெளியில் எங்கும் சென்று இருப்பேன் அல்லது நமது கடையில் என்னோடு இருக்கும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை வெளியில் போகசொல்லிவிட்டு பார்ப்பதற்க்கு உங்களுக்கு வசதியாக இருக்கும்.

ஒரு சில நண்பர்கள் இரவில் பத்து மணிக்கு மேல் போன் செய்கின்றனர் அதனை தவிர்த்துவிடுவது நல்லது. நான் பத்து மணி ஆகிவிட்டால் நல்ல தூங்கிவிடுவேன். அதிகாலையில் எழுந்திருப்பதால் இரவு பத்துமணிக்கு தூங்கிவிடுவது எனது பழக்கம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: