Followers

Sunday, October 20, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 58


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்தோம். இவ்வளவு தசா இருக்கும்பொழுது ராகு தசாவைப்பற்றி முதலில் பார்ப்பதற்க்கு என்ன காரணம் என்று யோசித்தேன். அப்பொழுது தான் தெரிந்தது.

இன்று உலகம் முழுவதும் இணையதொடர்பால் அனைவரும் ஒன்றுப்பட்டு இருக்கின்றனர். உலகத்தில் எங்கு எது நடந்தாலும் அது உடனே உலகத்திற்க்கே தெரியவந்துவிடுகிறது. கம்யூட்டர் யுகத்திற்க்கு காரணகர்த்தாவாக இருக்கும் ராகு தான் இதற்கு எல்லாம் காரணம். உலகமே ராகுவின் பிடியில் தான் இருப்பதற்க்கு இதனை விட வேறு உதாரணம் இருக்கமுடியாது. இது நன்மையை அளித்தாலும் அதிகமான தீங்கும் செய்யும்.

இன்று இணையதொடர்பில் இருப்பவர்கள் அடுத்தநாட்டு கலாசாரத்தைப்பற்றி தெரிந்துக்கொண்டு நாமும் அதனை போல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அடுத்த நாட்டு கலாசாரத்தை படிப்பதோடு இருந்தால் பிரச்சினை இல்லை. அதனை தெரிந்துக்கொண்டு நாமும் அதனைப்போல் வாழவேண்டும் என்று நினைக்கும்பொழுது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. 

ஒரு நேரத்தில் ஐடியில் வேலை செய்தால் ஏதோ ஆண்டவன் அவர்களோடு இருப்பது போல் தறிக்கெட்டு போனவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இப்படி தறிகெட்டு போனவர்கள் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஏன் இப்படி நடந்தது என்றால் கலாசாரத்தை மீறி சென்றதால் மட்டுமே நடந்தது. 

வெளிநாட்டு படிப்பு எல்லாம் படிக்கலாம். வெளிநாட்டு கலாசாரத்தை பின்பற்றி நடக்கவேண்டும்  என்று நினைத்தால் அனாதைகளாக தான் போவீ்ர்கள்.ராகுவின் தாக்குதலால் மட்டுமே இது நடக்கிறது. உலகம் ராகுக்குள் போகின்றது நீங்களும் ராகுக்குள் போய்விடாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: